யாழ்.மாநகர சபையின் பிரதி முதல்வராக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் இமானுவேல் தயாளன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்.மாநகர சபையின் முதல்வர் மற்றும் பிரதி முதல்வரை தெரிவு செய்வதற்கான கூட்டம் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் இன்றையதினம் காலை யாழ்.மாநகர சபை சபா மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது, யாழ்.மாநகர சபையின் முதல்வராக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் விவேகானந்தராஜா மதிவதனி தெரிவு செய்யப்பட்டார்.
இதனையடுத்து யாழ் மாநகர சபையின் பிரதி மேயர் தெரிவு இடம்பெற்றது.
யாழ் மாநகர சபையின் பிரதி மேயர் தெரிவிற்காக ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி துரைராசா ஈசனையும், இலங்கை தமிழரசுக் கட்சி இமானுவேல் தயாளனையும் நிறுத்தியிருந்தன.
இந்தநிலையில் வாக்கெடுப்பு முடிவில் 16 வாக்குகளை துரைராசா ஈசன் பெற்றிருந்த நிலையில், இமானுவேல் தயாளன் 19 வாக்குகளை பெற்று துணை முதல்வராக தெரிவு செய்யப்பட்டார்.
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினர் இமானுவேல் தயாளனுக்கு ஆதரவளித்து வாக்களித்திருந்தனர் என்பதுடன் தேசிய மக்கள் சக்தியின் 10 உறுப்பினர்களும் நடுநிலை வகித்தமை குறிப்பிடத்தக்கது.
யாழ் மாநகர சபையின் பிரதி முதல்வராக தயாளன் தெரிவு. யாழ்.மாநகர சபையின் பிரதி முதல்வராக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் இமானுவேல் தயாளன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,யாழ்.மாநகர சபையின் முதல்வர் மற்றும் பிரதி முதல்வரை தெரிவு செய்வதற்கான கூட்டம் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் இன்றையதினம் காலை யாழ்.மாநகர சபை சபா மண்டபத்தில் நடைபெற்றது.இதன்போது, யாழ்.மாநகர சபையின் முதல்வராக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் விவேகானந்தராஜா மதிவதனி தெரிவு செய்யப்பட்டார்.இதனையடுத்து யாழ் மாநகர சபையின் பிரதி மேயர் தெரிவு இடம்பெற்றது.யாழ் மாநகர சபையின் பிரதி மேயர் தெரிவிற்காக ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி துரைராசா ஈசனையும், இலங்கை தமிழரசுக் கட்சி இமானுவேல் தயாளனையும் நிறுத்தியிருந்தன.இந்தநிலையில் வாக்கெடுப்பு முடிவில் 16 வாக்குகளை துரைராசா ஈசன் பெற்றிருந்த நிலையில், இமானுவேல் தயாளன் 19 வாக்குகளை பெற்று துணை முதல்வராக தெரிவு செய்யப்பட்டார்.ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினர் இமானுவேல் தயாளனுக்கு ஆதரவளித்து வாக்களித்திருந்தனர் என்பதுடன் தேசிய மக்கள் சக்தியின் 10 உறுப்பினர்களும் நடுநிலை வகித்தமை குறிப்பிடத்தக்கது.