• Jun 14 2025

இதயம் நொறுங்கிய விமான விபத்து; சம்பவ இடத்தை நேரில் சென்று ஆராய்ந்த பிரதமர் மோடி

Chithra / Jun 13th 2025, 11:40 am
image

 

குஜராத் மாநிலம் அகமதாபாத்தை உலுக்கிய விமான விபத்து நிகழ்ந்த பகுதிக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று நிலைமையை ஆராய்ந்துள்ளார். 

அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து நேற்றுமதியம் 1.38 மணிக்கு லண்டன் புறப்பட்ட 'ஏர் இந்தியா' நிறுவனத்தின் 'போயிங் 787-8 விமானம்,  புறப்பட்ட 32 வினாடிகளிலேயே விமான நிலையம் அருகே இருந்த மருத்துவக் கல்லூரி விடுதி மற்றும் குடியிருப்புகள் மீது விழுந்து  விபத்துக்குள்ளாகியது. 

விமானத்தில் இருந்த 242 பயணிகளில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்துள்ளார். 

அத்துடன் மருத்துவக் கல்லூரி விடுதியிலும் பல மாணவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து குறித்து பிரதமர் மோடி அவரது உத்தியோகபூர்வ எக்ஸ் தள பதிவில், 

"அகமதாபாத் துயர சம்பவம் அதிர்ச்சிக்கும், வேதனைக்கும் உள்ளாக்கி இருக்கிறது. வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு இதயம் நொறுங்கியிருக்கிறது. " 

பேரழிவு நடந்த இந்த இடம் வருத்தமளிக்கிறது. அதன் பின்னர் அயராது உழைக்கும் அதிகாரிகள் மற்றும் குழுக்களைச் சந்தித்தேன். கற்பனை செய்ய முடியாத இந்த துயரத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுடன் எங்கள் எண்ணங்கள் தொடர்ந்து உள்ளன. என தெரிவித்துள்ளார்.  


இதயம் நொறுங்கிய விமான விபத்து; சம்பவ இடத்தை நேரில் சென்று ஆராய்ந்த பிரதமர் மோடி  குஜராத் மாநிலம் அகமதாபாத்தை உலுக்கிய விமான விபத்து நிகழ்ந்த பகுதிக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று நிலைமையை ஆராய்ந்துள்ளார். அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து நேற்றுமதியம் 1.38 மணிக்கு லண்டன் புறப்பட்ட 'ஏர் இந்தியா' நிறுவனத்தின் 'போயிங் 787-8 விமானம்,  புறப்பட்ட 32 வினாடிகளிலேயே விமான நிலையம் அருகே இருந்த மருத்துவக் கல்லூரி விடுதி மற்றும் குடியிருப்புகள் மீது விழுந்து  விபத்துக்குள்ளாகியது. விமானத்தில் இருந்த 242 பயணிகளில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்துள்ளார். அத்துடன் மருத்துவக் கல்லூரி விடுதியிலும் பல மாணவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.விபத்து குறித்து பிரதமர் மோடி அவரது உத்தியோகபூர்வ எக்ஸ் தள பதிவில், "அகமதாபாத் துயர சம்பவம் அதிர்ச்சிக்கும், வேதனைக்கும் உள்ளாக்கி இருக்கிறது. வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு இதயம் நொறுங்கியிருக்கிறது. " பேரழிவு நடந்த இந்த இடம் வருத்தமளிக்கிறது. அதன் பின்னர் அயராது உழைக்கும் அதிகாரிகள் மற்றும் குழுக்களைச் சந்தித்தேன். கற்பனை செய்ய முடியாத இந்த துயரத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுடன் எங்கள் எண்ணங்கள் தொடர்ந்து உள்ளன. என தெரிவித்துள்ளார்.  

Advertisement

Advertisement

Advertisement