• Apr 18 2026

யாழ் விரிவுரையாளர் கொலை வழக்கு: மரண விசாரணை அறிக்கை தாமதமென குற்றச்சாட்டு

Aathira / Apr 18th 2026, 10:16 am
image

யாழ்ப்பாண பல்கலைக்கழகம் சித்த மருத்துவ பீடத்தின் மூத்த விரிவுரையாளர் தயாளனி திலீபன் கொலை வழக்கில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 

கடந்த மார்ச் 18ஆம் தேதி படுகொலை செய்யப்பட்ட அவரின் சடலம் தனங்கிளப்பு பகுதியில் உள்ள பற்றைக்காட்டில் இருந்து மீட்கப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பில், விரிவுரையாளரின் மகள் மற்றும் மருமகன் ஆகியோர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், குறித்த வழக்கு சமீபத்தில் யாழ் நீதிவான் நீதிமன்றம்யில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

விசாரணையின் போது, மரண விசாரணை அறிக்கை இன்னும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டது. 

சடலம் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் நியாயாதிக்க எல்லைக்குள் மீட்கப்பட்டதால், அங்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

மேலும், முதன்மை சந்தேக நபரான மருமகன் சார்பில் ஆஜரான மூத்த சட்டத்தரணி, தனது தரப்பினரைப் பற்றிய தவறான செய்திகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளதாகவும், ஊடகவியலாளர்கள் தொடர்பில் பதிவுகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். 

இதற்கு பதிலளித்த நீதிமன்றம், தவறான செய்தி வெளியானால் மன்றில் முறையிடுமாறு தெரிவித்தது.

இவ்வழக்கு எதிர்வரும் 30ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்கள் இருவரும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

யாழ் விரிவுரையாளர் கொலை வழக்கு: மரண விசாரணை அறிக்கை தாமதமென குற்றச்சாட்டு யாழ்ப்பாண பல்கலைக்கழகம் சித்த மருத்துவ பீடத்தின் மூத்த விரிவுரையாளர் தயாளனி திலீபன் கொலை வழக்கில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த மார்ச் 18ஆம் தேதி படுகொலை செய்யப்பட்ட அவரின் சடலம் தனங்கிளப்பு பகுதியில் உள்ள பற்றைக்காட்டில் இருந்து மீட்கப்பட்டிருந்தது.இந்த சம்பவம் தொடர்பில், விரிவுரையாளரின் மகள் மற்றும் மருமகன் ஆகியோர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், குறித்த வழக்கு சமீபத்தில் யாழ் நீதிவான் நீதிமன்றம்யில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.விசாரணையின் போது, மரண விசாரணை அறிக்கை இன்னும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டது. சடலம் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் நியாயாதிக்க எல்லைக்குள் மீட்கப்பட்டதால், அங்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.மேலும், முதன்மை சந்தேக நபரான மருமகன் சார்பில் ஆஜரான மூத்த சட்டத்தரணி, தனது தரப்பினரைப் பற்றிய தவறான செய்திகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளதாகவும், ஊடகவியலாளர்கள் தொடர்பில் பதிவுகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த நீதிமன்றம், தவறான செய்தி வெளியானால் மன்றில் முறையிடுமாறு தெரிவித்தது.இவ்வழக்கு எதிர்வரும் 30ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்கள் இருவரும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement