• Oct 03 2024

ஜனாதிபதித் தேர்தலில் ரணிலை பொது வேட்பாளராகக் களமிறக்க தீர்மானம்..! வெளியான தகவல்

Chithra / Jan 19th 2024, 12:42 pm
image

Advertisement

 

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க தேசிய பொது வேட்பாளராகக் களமிறங்க வேண்டும் என மாவட்ட மட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை, அம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களிலேயே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, ரணில் விக்ரமசிங்க பொது வேட்பாளராகக் களமிறங்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் முகாமைத்துவக்குழு மற்றும் செயற்குழு என்பனவும் அண்மையில் தீர்மானித்துள்ளன.

மேலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்சவின் அரசியல் கோட்டையான அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

ஜனாதிபதித் தேர்தலில் ரணிலை பொது வேட்பாளராகக் களமிறக்க தீர்மானம். வெளியான தகவல்  அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க தேசிய பொது வேட்பாளராகக் களமிறங்க வேண்டும் என மாவட்ட மட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை, அம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களிலேயே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அதேவேளை, ரணில் விக்ரமசிங்க பொது வேட்பாளராகக் களமிறங்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் முகாமைத்துவக்குழு மற்றும் செயற்குழு என்பனவும் அண்மையில் தீர்மானித்துள்ளன.மேலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்சவின் அரசியல் கோட்டையான அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

Advertisement

Advertisement

Advertisement