• Sep 19 2024

மெக்ஸிக்கோ நாடாளுமன்றத்தில் புகுந்த ஆர்ப்பாட்டக்காரர்கள்

Anaath / Sep 11th 2024, 5:01 pm
image

Advertisement

மெக்சிக்கோ நாடாளுமன்றத்தில் உள்  நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இது குறித்து மேலும் தெரிய வருவதாவது,இன்றைய தினம் (11) மெக்சிக்கோ செனெட்டில் நீதித்துறை சீர்திருத்தம் குறித்து விவாதம் இடம்பெற்றுக்கொண்டிருந்தது. 

இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் திடீரென உள்ளே நுழைந்துள்ளதுடன் வன்முறையில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து செனெட் உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக சபையின் அமர்வுகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டன. 

நீதித்துறை சீர்திருத்த சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு ஆளும் கட்சியான மொரேனாவிற்கு தேவையான வாக்குகள் கிடைத்திருந்த நிலையிலேயே ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தமை குறிப்பிடத்தக்கது.

மெக்சிக்கோவின் பதவி விலகும் ஜனாதிபதியின் நீதித்துறை சீர்திருத்த முயற்சிகளிற்கு மாணவர்களும்,நீதித்துறை ஊழியர்களும் கடும் எதிர்ப்பை வெளியிட்டு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

குறித்த இதேவேளை எதிர்கட்சி உறுப்பினர் ஒருவர் ஆளும்கட்சிக்கு ஆதரவை வெளியிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் அதோடு நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும் முறையை அறிமுகப்படுத்தவுள்ள இந்த சீர்திருத்த திட்டத்தினால் நீதித்துறையின் சுதந்திரத்திற்கு பெரும் ஆபத்து ஏற்படும் என ஆய்வாளர்களும் விமர்சகர்களும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் வாக்கெடுப்பை தவிர்ப்பதற்காக நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறும் பகுதிக்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களை செவிமடுப்பதில்லை எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் மெக்சிக்கோ கொடியையும் நீதித்துறை சீர்திருத்த முயற்சிகளிற்கு எதிரான வாசகங்களையும் ஏந்திய ஆர்ப்பாட்டக்காரர்கள் நீதித்துறை வீழ்ச்சியடையாது என கோஷமிட்டுள்ளனர்.

மேலும் நீதித்துறை சீர்திருத்தம் எவ்வளவு ஆபத்தானது என்பது தங்களிற்கு தெரியும் என 30 வயது நீதித்துறை பணியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மெக்ஸிக்கோ நாடாளுமன்றத்தில் புகுந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மெக்சிக்கோ நாடாளுமன்றத்தில் உள்  நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.இது குறித்து மேலும் தெரிய வருவதாவது,இன்றைய தினம் (11) மெக்சிக்கோ செனெட்டில் நீதித்துறை சீர்திருத்தம் குறித்து விவாதம் இடம்பெற்றுக்கொண்டிருந்தது. இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் திடீரென உள்ளே நுழைந்துள்ளதுடன் வன்முறையில் ஈடுபட்டனர்.இதனையடுத்து செனெட் உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக சபையின் அமர்வுகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டன. நீதித்துறை சீர்திருத்த சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு ஆளும் கட்சியான மொரேனாவிற்கு தேவையான வாக்குகள் கிடைத்திருந்த நிலையிலேயே ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தமை குறிப்பிடத்தக்கது.மெக்சிக்கோவின் பதவி விலகும் ஜனாதிபதியின் நீதித்துறை சீர்திருத்த முயற்சிகளிற்கு மாணவர்களும்,நீதித்துறை ஊழியர்களும் கடும் எதிர்ப்பை வெளியிட்டு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.குறித்த இதேவேளை எதிர்கட்சி உறுப்பினர் ஒருவர் ஆளும்கட்சிக்கு ஆதரவை வெளியிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.அத்துடன் அதோடு நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும் முறையை அறிமுகப்படுத்தவுள்ள இந்த சீர்திருத்த திட்டத்தினால் நீதித்துறையின் சுதந்திரத்திற்கு பெரும் ஆபத்து ஏற்படும் என ஆய்வாளர்களும் விமர்சகர்களும் கருத்து வெளியிட்டுள்ளனர்.இந்நிலையில் வாக்கெடுப்பை தவிர்ப்பதற்காக நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறும் பகுதிக்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களை செவிமடுப்பதில்லை எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.அத்துடன் மெக்சிக்கோ கொடியையும் நீதித்துறை சீர்திருத்த முயற்சிகளிற்கு எதிரான வாசகங்களையும் ஏந்திய ஆர்ப்பாட்டக்காரர்கள் நீதித்துறை வீழ்ச்சியடையாது என கோஷமிட்டுள்ளனர்.மேலும் நீதித்துறை சீர்திருத்தம் எவ்வளவு ஆபத்தானது என்பது தங்களிற்கு தெரியும் என 30 வயது நீதித்துறை பணியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement