திருகோணமலை கடற்கரை பகுதியான இன்று வியாழக்கிழமை காலை கிழக்கு மாகாண
முதலமைச்சின் செயலக உத்தியோகத்தர்கள் ஊழியர்களினால் சிரமதானம் மூலம்
துப்பரவு செய்யப்பட்டது.
30 ஆம் திகதியிலிருந்து எதிர்வரும் 05 ஆம்
திகதிவரை சுற்றாடல் அமைச்சினால் "சுற்றாடல் வாரம்" என
அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு
வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டுமென அரச அலுவலகங்களுக்கு
அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ் சுற்றாடல் வாரத்தில் மரநடுகை,டெங்கு
சிரமதானம்,கடற்கரை துப்பரவு பணி என ஒவ்வொரு நாளும் வெவ்வேறு
வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக இன்றைய தினம் திருகோணமலை கடற்கரை துப்பரவு செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.