• Oct 26 2024

முல்லைத்தீவில் தமிழரசுக்கட்சியின் தேர்தல் அலுவலகம் திறந்து வைப்பு - டினேசன்

Tharmini / Oct 26th 2024, 9:44 am
image

Advertisement

நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்காக முல்லைத்தீவு விசுவமடு பகுதியில் இலங்கை தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் சட்டத்தரணி செல்வராஜ் டினேசனின் தேர்தல் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வானது நேற்று (25) தினம் காலை 10 மணியளவில் இடம்பெற்றது.

இதன்போது  தமிழரசுக்கட்சியின் ஆதரவாளர்கள் பெருமளவிலான பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

அத்துடன் அலுவலகம் திறந்த பின்னர் முல்லைத்தீவு மற்றும் விசுவமடு பகுதி கிராமங்களில் பிரச்சார நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டபோது டினேசன் அவர்களுக்கு முல்லைத்தீவு மக்கள் தங்கள் ஆதரவை தெரிவித்தார்கள்.




முல்லைத்தீவில் தமிழரசுக்கட்சியின் தேர்தல் அலுவலகம் திறந்து வைப்பு - டினேசன் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்காக முல்லைத்தீவு விசுவமடு பகுதியில் இலங்கை தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் சட்டத்தரணி செல்வராஜ் டினேசனின் தேர்தல் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.இந் நிகழ்வானது நேற்று (25) தினம் காலை 10 மணியளவில் இடம்பெற்றது.இதன்போது  தமிழரசுக்கட்சியின் ஆதரவாளர்கள் பெருமளவிலான பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.அத்துடன் அலுவலகம் திறந்த பின்னர் முல்லைத்தீவு மற்றும் விசுவமடு பகுதி கிராமங்களில் பிரச்சார நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டபோது டினேசன் அவர்களுக்கு முல்லைத்தீவு மக்கள் தங்கள் ஆதரவை தெரிவித்தார்கள்.

Advertisement

Advertisement

Advertisement