• Sep 19 2024

நல்லூர் ஆலய சூழலில் பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள வீதி தடைகள் தொடர்பிலான கலந்துரையாடல்

Anaath / Aug 9th 2024, 5:28 pm
image

Advertisement

நல்லூர் ஆலய சூழலில் பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள வீதி தடைகள் தொடர்பிலான கலந்துரையாடல்

நல்லூர் ஆலய சூழலில் பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள வீதி தடைகள் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் யாழ் மாவட்ட பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ்  தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் (09) அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது, 

இக்கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாநகரசபை ஆணையாளரும்  வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் ஆணையாளர் சார்பில் அத்திணைக்களத்தின் விசாரணை அதிகாரியும் கலந்துகொண்டனர்.

இதன்போது கருத்துதெரிவித்த யாழ்ப்பாண மாநகர சபையின் ஆணையாளர், இவ்விடயம் தொடர்பில் பொலிஸ் தரப்பினரிடமும், நல்லூர் ஆலய நிர்வாகத்திடமும் கலந்துரையாடி பொதுமக்களுக்கு அசௌகரியங்கள் மற்றும் ஆபத்துகள்  ஏற்படாத வகையில் வீதி தடைகள் அமைக்கப்படுவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார். இது தொடர்பில் யாழ் மாநகர சபை ஆணையாளரின் நடவடிக்கையினை அடுத்து எமது மேலதிக கலந்துரையாடல் இடம்பெறும்- என அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்லூர் ஆலய சூழலில் பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள வீதி தடைகள் தொடர்பிலான கலந்துரையாடல் நல்லூர் ஆலய சூழலில் பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள வீதி தடைகள் தொடர்பிலான கலந்துரையாடல்நல்லூர் ஆலய சூழலில் பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள வீதி தடைகள் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் யாழ் மாவட்ட பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ்  தெரிவித்துள்ளார்.இன்றைய தினம் (09) அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது, இக்கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாநகரசபை ஆணையாளரும்  வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் ஆணையாளர் சார்பில் அத்திணைக்களத்தின் விசாரணை அதிகாரியும் கலந்துகொண்டனர்.இதன்போது கருத்துதெரிவித்த யாழ்ப்பாண மாநகர சபையின் ஆணையாளர், இவ்விடயம் தொடர்பில் பொலிஸ் தரப்பினரிடமும், நல்லூர் ஆலய நிர்வாகத்திடமும் கலந்துரையாடி பொதுமக்களுக்கு அசௌகரியங்கள் மற்றும் ஆபத்துகள்  ஏற்படாத வகையில் வீதி தடைகள் அமைக்கப்படுவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார். இது தொடர்பில் யாழ் மாநகர சபை ஆணையாளரின் நடவடிக்கையினை அடுத்து எமது மேலதிக கலந்துரையாடல் இடம்பெறும்- என அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement