• Jul 27 2024

“எரியும் நினைவுகள்” யாழ்பாண நூலகத்தின் கதை என்னும் கருப்பொருளில் ஆவணப்படத் திரையிடல்

Tamil nila / May 29th 2024, 9:15 pm
image

Advertisement

“எரியும் நினைவுகள்” யாழ்பாண நூலகத்தின் கதை  என்னும்ஆவணப்படத்தின் திரையிடலும் கலந்துரையாடலும் இன்று யாழில் இடம் பெற்றது.

ஆவணப்பட இயக்குனர் எஸ்.சோமிதரன் தலமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

திரையிடல் நிகழ்வும் கலந்துரையாடலும்  மாலை யாழ்ப்பாண பொதுசன நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. 

குறித்த நிகழ்வில் ஆவணப்பட இயக்குனர் எஸ் சோமிதரன், சிவகுரு ஆதீன குருமுதல்வர்வேலன் சுவாமிகள், பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கயேந்திரன், குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் தலைவர் கோமகன், சிவில் சமூகத்தினர் மற்றும்  என பலரும் கலந்து கொண்டிருந்தனர். 

ஆவணப்படத் திரையிடலுடன் ஆரம்பமான குறித்த நிகழ்வில் ஆவணப்படம் சார்ந்த கலந்துரையாடலும் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வுக்கு தமிழ் சிவில் சமூக அமையம் அனுசரணை வழங்கியிருந்தது.




“எரியும் நினைவுகள்” யாழ்பாண நூலகத்தின் கதை என்னும் கருப்பொருளில் ஆவணப்படத் திரையிடல் “எரியும் நினைவுகள்” யாழ்பாண நூலகத்தின் கதை  என்னும்ஆவணப்படத்தின் திரையிடலும் கலந்துரையாடலும் இன்று யாழில் இடம் பெற்றது.ஆவணப்பட இயக்குனர் எஸ்.சோமிதரன் தலமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.திரையிடல் நிகழ்வும் கலந்துரையாடலும்  மாலை யாழ்ப்பாண பொதுசன நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் ஆவணப்பட இயக்குனர் எஸ் சோமிதரன், சிவகுரு ஆதீன குருமுதல்வர்வேலன் சுவாமிகள், பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கயேந்திரன், குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் தலைவர் கோமகன், சிவில் சமூகத்தினர் மற்றும்  என பலரும் கலந்து கொண்டிருந்தனர். ஆவணப்படத் திரையிடலுடன் ஆரம்பமான குறித்த நிகழ்வில் ஆவணப்படம் சார்ந்த கலந்துரையாடலும் இடம்பெற்றது.குறித்த நிகழ்வுக்கு தமிழ் சிவில் சமூக அமையம் அனுசரணை வழங்கியிருந்தது.

Advertisement

Advertisement

Advertisement