• Oct 19 2024

எதிர்கால சந்ததியை அழிக்காதே...!திருமலையில் மதுக்கடைக்கு எதிர்ப்பு...! வீதியில் இறங்கிய மக்கள்...!samugammedia

Sharmi / Sep 8th 2023, 3:41 pm
image

Advertisement

திருகோணமலை , தோப்பூர் -கூர்கண்டம் பகுதியில் தனியார் ஒருவரினால் மதுபான சாலை அமைப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்று வரும் நிலையில் மதுபான சாலைக்கான அனுமதியை வழங்க வேண்டாமென தெரிவித்து இன்று வெள்ளிக்கிழமை (08) அமைதியான முறையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

தோப்பூர் -கூர்கண்டம் ஜும்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்ற தொழுகையை தொடர்ந்து சுலோகங்களை ஏந்தியவாறு நடைபவணியாக வந்து திருகோணமலை -மட்டக்களப்பு வீதியில் இவ் கவனயீர்ப்பு முன்னெடுக்கப்பட்டது.

தோப்பூர் -கூர்கண்டம் பகுதியில் மதுபானசாலை அமையப் பெறுமாக இருந்தால் பல்வேறு சமூக சீர்கேடுகளும், பிரச்சினைகளும் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் இருக்கின்றன.அதனால் இப்பிரதேசத்தில் மதுபானசாலை அமைவதற்கு தாம் எதிர்ப்பினை வெளியிடுவதாக கவனயீர்ப்பில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.

இது விடயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு தோப்பூர் - கூர்கண்டம் பகுதியில் மதுபானசாலை திறப்பதனை தடுப்பதற்கு முன்வர வேண்டுமெனவும் மக்கள் கோரிக்கை விடுத்தனர். 



எதிர்கால சந்ததியை அழிக்காதே.திருமலையில் மதுக்கடைக்கு எதிர்ப்பு. வீதியில் இறங்கிய மக்கள்.samugammedia திருகோணமலை , தோப்பூர் -கூர்கண்டம் பகுதியில் தனியார் ஒருவரினால் மதுபான சாலை அமைப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்று வரும் நிலையில் மதுபான சாலைக்கான அனுமதியை வழங்க வேண்டாமென தெரிவித்து இன்று வெள்ளிக்கிழமை (08) அமைதியான முறையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.தோப்பூர் -கூர்கண்டம் ஜும்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்ற தொழுகையை தொடர்ந்து சுலோகங்களை ஏந்தியவாறு நடைபவணியாக வந்து திருகோணமலை -மட்டக்களப்பு வீதியில் இவ் கவனயீர்ப்பு முன்னெடுக்கப்பட்டது.தோப்பூர் -கூர்கண்டம் பகுதியில் மதுபானசாலை அமையப் பெறுமாக இருந்தால் பல்வேறு சமூக சீர்கேடுகளும், பிரச்சினைகளும் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் இருக்கின்றன.அதனால் இப்பிரதேசத்தில் மதுபானசாலை அமைவதற்கு தாம் எதிர்ப்பினை வெளியிடுவதாக கவனயீர்ப்பில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.இது விடயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு தோப்பூர் - கூர்கண்டம் பகுதியில் மதுபானசாலை திறப்பதனை தடுப்பதற்கு முன்வர வேண்டுமெனவும் மக்கள் கோரிக்கை விடுத்தனர். 

Advertisement

Advertisement

Advertisement