• Sep 19 2024

கொழும்பில் சிக்கிய போதைப்பொருட்கள்- இருவர் கைது..!

Sharmi / Aug 6th 2024, 3:53 pm
image

Advertisement

கொழும்பில் இரு வெவ்வேறு பகுதிகளில் ஐஸ் போதைப்பொருட்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் நேற்றையதினம்(05) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதன்படி, கொழும்பு, புறக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 32 கிராம் 200 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபரொருவர் புறக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, கொழும்பு, கிராண்டபாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சாதம்மாவத்த பகுதியில் 10 கிராம் 890 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபரொருவர் கிராண்டபாஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு ஒருகொடவத்தை பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராண்டபாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பில் சிக்கிய போதைப்பொருட்கள்- இருவர் கைது. கொழும்பில் இரு வெவ்வேறு பகுதிகளில் ஐஸ் போதைப்பொருட்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் நேற்றையதினம்(05) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.அதன்படி, கொழும்பு, புறக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 32 கிராம் 200 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபரொருவர் புறக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இதேவேளை, கொழும்பு, கிராண்டபாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சாதம்மாவத்த பகுதியில் 10 கிராம் 890 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபரொருவர் கிராண்டபாஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.கொழும்பு ஒருகொடவத்தை பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராண்டபாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement