தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, நீரை முடிந்தவரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
நிலவும் வறட்சியான காலநிலையினால் முக்கிய நீர் ஆதாரங்களில் நீர் மட்டம் வேகமாகக் குறைந்து வருவதோடு, நீரின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
எனவே, குடிநீர் விநியோகம் குறைவாக இருப்பதால், அனைவரின் அத்தியாவசிய குடிநீர் மற்றும் சுகாதாரத் தேவைகளுக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வாகனங்களை கழுவுதல் மற்றும் தோட்டக்கலை உள்ளிட்ட அத்தியாவசியமற்ற நடவடிக்கைகளுக்கு நீரைப் பயன்படுத்துவதைக் குறைத்து, அத்தியாவசிய அன்றாட நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் சபை கோரியுள்ளது.
நுகர்வோரின் குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, மலைப் பகுதிகளில் உள்ள நுகர்வோருக்கு நீர் விநியோகம் குறைந்த அழுத்தத்தில் இடம்பெறலாம்.
இந்த வறட்சியான மற்றும் சீரற்ற வானிலை காரணமாக பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களுக்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை வருத்தம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளுக்கு 1939 என்ற துரித இலக்கத்திற்கு அழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
வரட்சியான வானிலையால் நீர் விநியோகத்தில் சிக்கல் பொதுமக்களிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, நீரை முடிந்தவரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.நிலவும் வறட்சியான காலநிலையினால் முக்கிய நீர் ஆதாரங்களில் நீர் மட்டம் வேகமாகக் குறைந்து வருவதோடு, நீரின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. எனவே, குடிநீர் விநியோகம் குறைவாக இருப்பதால், அனைவரின் அத்தியாவசிய குடிநீர் மற்றும் சுகாதாரத் தேவைகளுக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.வாகனங்களை கழுவுதல் மற்றும் தோட்டக்கலை உள்ளிட்ட அத்தியாவசியமற்ற நடவடிக்கைகளுக்கு நீரைப் பயன்படுத்துவதைக் குறைத்து, அத்தியாவசிய அன்றாட நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் சபை கோரியுள்ளது. நுகர்வோரின் குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, மலைப் பகுதிகளில் உள்ள நுகர்வோருக்கு நீர் விநியோகம் குறைந்த அழுத்தத்தில் இடம்பெறலாம். இந்த வறட்சியான மற்றும் சீரற்ற வானிலை காரணமாக பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களுக்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை வருத்தம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளுக்கு 1939 என்ற துரித இலக்கத்திற்கு அழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.