• Jul 11 2025

டெல்லியை உலுக்கிய நிலநடுக்கம்; பீதியில் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்

Chithra / Jul 10th 2025, 11:29 am
image

இந்தியாவின்  தலைநகர் டெல்லியில் இன்று காலை 9.04 மணியளவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

இது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகியுள்ளது. 

இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம்  டெல்லி, உத்தரப்பிரதேசத்தின் நொய்டா, காசியாபாத் உள்ளிட்ட இடங்களில் உணரப்பட்டுள்ளது. 

மேலும் அரியானாவின் குராவாரா பகுதியில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும், பூமியின் மேற்பரப்பிலிருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகவும் புவியியல் மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்த திடீர் நிலநடுக்கத்தால் மக்கள் அச்சமடைந்து  வீடுகளை விட்டு வெளியேறினர். 

எனினும், நிலநடுக்கத்தால் உயிர் சேதம், பொருள் சேதம் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.


டெல்லியை உலுக்கிய நிலநடுக்கம்; பீதியில் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் இந்தியாவின்  தலைநகர் டெல்லியில் இன்று காலை 9.04 மணியளவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகியுள்ளது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.இந்த நிலநடுக்கம்  டெல்லி, உத்தரப்பிரதேசத்தின் நொய்டா, காசியாபாத் உள்ளிட்ட இடங்களில் உணரப்பட்டுள்ளது. மேலும் அரியானாவின் குராவாரா பகுதியில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும், பூமியின் மேற்பரப்பிலிருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகவும் புவியியல் மையம் தகவல் தெரிவித்துள்ளது.இந்த திடீர் நிலநடுக்கத்தால் மக்கள் அச்சமடைந்து  வீடுகளை விட்டு வெளியேறினர். எனினும், நிலநடுக்கத்தால் உயிர் சேதம், பொருள் சேதம் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.

Advertisement

Advertisement

Advertisement