இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் முதல் செயலாளர் (வளர்ச்சி ஒத்துழைப்பு – Development Cooperation – DC) அசோக் குமார் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று (19) திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
ரூபாய் 2.3 பில்லியன் மதிப்புள்ள இந்திய உதவியின் கீழ் கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் திட்டங்களின் தற்போதைய நிலைமை குறித்து கலந்துரையாடுவதும், அதன் மூலம் திருகோணமலை மாவட்டத்தில் நடைமுறையில் உள்ள திட்ட இடங்களை நேரில் பார்வையிடுவதும் தான் தனது திருகோணமலை மாவட்ட விஜயத்தின் நோக்கம் என அவர் தெரிவித்தார்.
தற்போது ஆரம்ப கட்டத்தில் உள்ள இந்தத் திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுக்க வழங்கப்படும் ஒத்துழைப்பிற்காக ஆளுநர்முதல் செயலாளருக்கு விசேட நன்றியை தெரிவித்ததுடன், கிழக்கு மாகாணத்தில் நடைமுறையில் உள்ள இந்தத் திட்டங்களை வெற்றியடையச் செய்வதற்காக தனது குழு முழுமையான அர்ப்பணிப்புடன் செயல்படும் என்றும் ஆளுநர் இதன் போது குறிப்பிட்டார்.
மேலும், ‘திட்வா’ புயல் பேரழிவு ஏற்பட்ட போது இந்திய அரசின் தலையீடு மற்றும் உதவிகள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், அதற்காக நன்றியும் தெரிவிக்கப்பட்டது.
இந்திய உயர்ஸ்தானிகராலய முதல் செயலாளருடன் கிழக்கு ஆளுநர் சந்திப்பு இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் முதல் செயலாளர் (வளர்ச்சி ஒத்துழைப்பு – Development Cooperation – DC) அசோக் குமார் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று (19) திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.ரூபாய் 2.3 பில்லியன் மதிப்புள்ள இந்திய உதவியின் கீழ் கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் திட்டங்களின் தற்போதைய நிலைமை குறித்து கலந்துரையாடுவதும், அதன் மூலம் திருகோணமலை மாவட்டத்தில் நடைமுறையில் உள்ள திட்ட இடங்களை நேரில் பார்வையிடுவதும் தான் தனது திருகோணமலை மாவட்ட விஜயத்தின் நோக்கம் என அவர் தெரிவித்தார்.தற்போது ஆரம்ப கட்டத்தில் உள்ள இந்தத் திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுக்க வழங்கப்படும் ஒத்துழைப்பிற்காக ஆளுநர்முதல் செயலாளருக்கு விசேட நன்றியை தெரிவித்ததுடன், கிழக்கு மாகாணத்தில் நடைமுறையில் உள்ள இந்தத் திட்டங்களை வெற்றியடையச் செய்வதற்காக தனது குழு முழுமையான அர்ப்பணிப்புடன் செயல்படும் என்றும் ஆளுநர் இதன் போது குறிப்பிட்டார்.மேலும், ‘திட்வா’ புயல் பேரழிவு ஏற்பட்ட போது இந்திய அரசின் தலையீடு மற்றும் உதவிகள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், அதற்காக நன்றியும் தெரிவிக்கப்பட்டது.