கிளிநொச்சி ஜேர்மன் தொழில் பயிற்சி நிறுவனத்திற்கு கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த நேற்றையதினம்(05) விஜயம் மேற்கொண்டிருந்தார்.
ஜேர்மன் தொழில் பயிற்சி நிறுவனத்தின் செயற்பாடுகளை கண்காணிக்கும் மற்றும் குறை நிறைகளுக்கு தீர்வுகாணும் நோக்குடன் குறித்த விஜயம் இடம்பெற்றது.
குறித்த நிறுவனத்தின் செயற்பாடுகளை தடையின்றி முன்னெடுக்கவும். தொழில்சார் கற்றல் செயற்பாடுகளை மேம்படுத்தும் வகையிலும் கலந்துரையாடப்பட்டது.
குறித்த நிகழ்வில், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் இராமநாதன், கல்லூரி முதல்வர், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.