• Sep 21 2024

யாழில் மரக்கறி வாங்க சந்தைக்கு சென்ற முதியவர் முச்சக்கர வண்டி மோதி உயிரிழப்பு!

Tamil nila / Aug 18th 2024, 7:46 pm
image

Advertisement

யாழ்ப்பாணம் - திருநெல்வேலி சந்தையில் மரக்கறி வாங்குவதற்கு சென்ற முதியவர் முச்சக்கரவண்டி மோதி மரணம் அடைந்துள்ளார். ஆனைப்பந்தி, பருத்தித்துறை வீதி யாழ்ப்பணம் பகுதியைச் சேர்ந்த சின்னையா இரத்தினசிங்கம்  என்பவரே   இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த முதியவர் ஆனி மாதம் 22 ஆம் திகதி சிவன் பண்ணை வீதியூடாக, திருநெல்வேலி சந்தையில் மரக்கறி வாங்குவதற்காக துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் குறித்த முதியவர் எதிர் திசையில் வந்த முச்சக்கரவண்டி  மோதி அவ்விடத்தில் மயக்கம் அடைந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த முதியவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டு, சிகிச்சையின் பின்னர் கடந்த மூன்றாம் திகதி வீடு திரும்பினார். இந்நிலையில் நேற்றைய தினம் அவர் உயிரிழந்துள்ளார். 

அவரது சடலம் மீதாரம் மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். தலையில் அடிபட்டதாலேயே மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனை அறிக்கைகளில் தெரியவந்துள்ளது.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

யாழில் மரக்கறி வாங்க சந்தைக்கு சென்ற முதியவர் முச்சக்கர வண்டி மோதி உயிரிழப்பு யாழ்ப்பாணம் - திருநெல்வேலி சந்தையில் மரக்கறி வாங்குவதற்கு சென்ற முதியவர் முச்சக்கரவண்டி மோதி மரணம் அடைந்துள்ளார். ஆனைப்பந்தி, பருத்தித்துறை வீதி யாழ்ப்பணம் பகுதியைச் சேர்ந்த சின்னையா இரத்தினசிங்கம்  என்பவரே   இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த முதியவர் ஆனி மாதம் 22 ஆம் திகதி சிவன் பண்ணை வீதியூடாக, திருநெல்வேலி சந்தையில் மரக்கறி வாங்குவதற்காக துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் குறித்த முதியவர் எதிர் திசையில் வந்த முச்சக்கரவண்டி  மோதி அவ்விடத்தில் மயக்கம் அடைந்துள்ளார்.இந்நிலையில் குறித்த முதியவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டு, சிகிச்சையின் பின்னர் கடந்த மூன்றாம் திகதி வீடு திரும்பினார். இந்நிலையில் நேற்றைய தினம் அவர் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதாரம் மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். தலையில் அடிபட்டதாலேயே மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனை அறிக்கைகளில் தெரியவந்துள்ளது.உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement