• May 19 2024

கிராம மட்டத்தில் இருந்து தேர்தல் பிரசாரம்; இன்று கொழும்புக்கு அழைக்கப்பட்ட மொட்டுக் கட்சி செயற்பாட்டாளர்கள்..!

Chithra / May 8th 2024, 8:52 am
image

Advertisement

 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் கட்சியினர் இன்று (08) கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

கட்சியின் தேர்தல் பிரசாரம் தொடர்பான விடயங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காகவே இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளனர்.

கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தலைமையில் நெலும் மாவத்தை கட்சி அலுவலகத்தில் இக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்றக் குழுவிற்கும், பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் நேற்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இம்மாத இறுதியிலிருந்து கிராம மட்டத்தில் கட்சியின் தேர்தல் பிரசாரத்தை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கிராம மட்டத்தில் இருந்து தேர்தல் பிரசாரம்; இன்று கொழும்புக்கு அழைக்கப்பட்ட மொட்டுக் கட்சி செயற்பாட்டாளர்கள்.  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் கட்சியினர் இன்று (08) கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.கட்சியின் தேர்தல் பிரசாரம் தொடர்பான விடயங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காகவே இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளனர்.கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தலைமையில் நெலும் மாவத்தை கட்சி அலுவலகத்தில் இக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்றக் குழுவிற்கும், பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் நேற்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.இம்மாத இறுதியிலிருந்து கிராம மட்டத்தில் கட்சியின் தேர்தல் பிரசாரத்தை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement