• Feb 09 2025

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரசியல் கட்சிகளுடன் தேர்தல்கள் ஆணைக்குழு பேச்சுவார்த்தை

Chithra / Feb 9th 2025, 7:46 am
image


மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குப் புதிதாக வேட்புமனுக்களைக் கோரவுள்ளதால் ஆரம்பத்தில் இருந்து தேர்தலுக்கான பணிகளை முன்னெடுக்க வேண்டும். தேர்தல் பணிகளுக்குத் தேவையான நிதி திறைசேரியால் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆகவே, நிதி நெருக்கடி ஏதும் ஏற்படாது. உள்ளூராட்சி அதிகார சபைகள் சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு தற்போது அவை விசாரணைகளுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டே உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்பு திகதியை நிர்ணயிக்க முடியும். 

வேட்புமனுக்கள் தாக்கல் செய்வதற்கும், தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்வதற்கும் போதுமான கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்.

ஆகவே, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்சட்டமூலம் நிறைவேற்றப்பட்டவுடன் உறுதியான தீர்மானத்தை எடுக்க முடியும். 

காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை வெகுவிரைவில் நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம். 

எதிர்வரும் காலங்களில் அரசியல் கட்சிகளுடன் மாகாண சபைத் தேர்தல் குறித்து பேச்சில் ஈடுபடவுள்ளோம்.

காணப்படும் சட்ட சிக்கலுக்குத் தீர்வு கண்டு மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்தும் சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கும், நாடாளுமன்றத்துக்கும் உண்டு என குறிப்பிட்டுள்ளார்.

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரசியல் கட்சிகளுடன் தேர்தல்கள் ஆணைக்குழு பேச்சுவார்த்தை மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குப் புதிதாக வேட்புமனுக்களைக் கோரவுள்ளதால் ஆரம்பத்தில் இருந்து தேர்தலுக்கான பணிகளை முன்னெடுக்க வேண்டும். தேர்தல் பணிகளுக்குத் தேவையான நிதி திறைசேரியால் ஒதுக்கப்பட்டுள்ளது.ஆகவே, நிதி நெருக்கடி ஏதும் ஏற்படாது. உள்ளூராட்சி அதிகார சபைகள் சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு தற்போது அவை விசாரணைகளுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டே உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்பு திகதியை நிர்ணயிக்க முடியும். வேட்புமனுக்கள் தாக்கல் செய்வதற்கும், தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்வதற்கும் போதுமான கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்.ஆகவே, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்சட்டமூலம் நிறைவேற்றப்பட்டவுடன் உறுதியான தீர்மானத்தை எடுக்க முடியும். காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை வெகுவிரைவில் நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம். எதிர்வரும் காலங்களில் அரசியல் கட்சிகளுடன் மாகாண சபைத் தேர்தல் குறித்து பேச்சில் ஈடுபடவுள்ளோம்.காணப்படும் சட்ட சிக்கலுக்குத் தீர்வு கண்டு மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்தும் சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கும், நாடாளுமன்றத்துக்கும் உண்டு என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement