• Sep 18 2024

தேர்தல் முறைப்பாடுகள் 4000 ஐ நெருங்கியது

Anaath / Sep 14th 2024, 12:21 pm
image

Advertisement

நாட்டில் நடைபெறவுள்ள  ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரை 3,828 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் இதுவரை தேர்தல் சட்டத்தினை மீறுதல் தொடர்பில் 3720 முறைப்பாடுகளும் வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 28 முறைப்பாடுகளும் 80 வேறு முறைப்பாடுகளும்  கிடைக்கப்பெற்றுள்ளதாக அந்த அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே வேளை கடந்த வியாழக்கிழமை (12)   218 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன . அதனடிப்படையில் தேர்தல் சட்டத்தினை மீறுதல் தொடர்பில் 214 முறைப்பாடுகளும்  4 வேறு முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.

அத்துடன் , இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளில் சிறிதளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் ஆர்.எம். ஏ. எல் ரத்நாயக்க தெரிவித்தார்.

தேர்தல் முறைப்பாடுகள் 4000 ஐ நெருங்கியது நாட்டில் நடைபெறவுள்ள  ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரை 3,828 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதனடிப்படையில் இதுவரை தேர்தல் சட்டத்தினை மீறுதல் தொடர்பில் 3720 முறைப்பாடுகளும் வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 28 முறைப்பாடுகளும் 80 வேறு முறைப்பாடுகளும்  கிடைக்கப்பெற்றுள்ளதாக அந்த அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.இதே வேளை கடந்த வியாழக்கிழமை (12)   218 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன . அதனடிப்படையில் தேர்தல் சட்டத்தினை மீறுதல் தொடர்பில் 214 முறைப்பாடுகளும்  4 வேறு முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.அத்துடன் , இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளில் சிறிதளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் ஆர்.எம். ஏ. எல் ரத்நாயக்க தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement