• Oct 11 2024

கடன் பெற்றுக்கொண்டாலும் விரயமாக்கமாட்டோம்! புதிய அரசாங்கம் அறிவிப்பு

Chithra / Oct 10th 2024, 8:44 am
image

Advertisement

 

கடன் பெற்றுக்கொண்டாலும் அவற்றை விரயமாக்கப்போவதில்லை என புதிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

திறைசேரி உண்டியல்கள் மற்றும் பிணைமுறிகள் மூலம் கடன் பெற்றுக்கொண்டாலும் அவை உரிய முறையில் செலவிடப்படும் என தேசிய மக்கள் சக்தியின்  சிரேஸ்ட உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் பெற்றுக்கொண்ட கடன்களை செலுத்தவும், அரசாங்கத்தின் செலவுகளை ஈடு செய்யவும் இவ்வாறு கடன் பெற்றுக்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் நாட்டில் நிதியின்றி பணம் அச்சிடப்படவோ அல்லது திறைசேரி உண்டியல்கள் மூலம் புதிய கடன்கள் பெற்றுக்கொள்ளப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் என்ற ரீதியில் தேவைக்கு ஏற்ற வகையில் திறைசேரி பத்திரங்களும், பிணைமுறிகளும் வெளியிடுவதாகவும், இவ்வாறு பெற்றுக்கொள்ளப்படும் கடன் வெளிப்படைத்தன்மையுடன் செலவிடப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு மாறாக கடந்த அரசாங்கங்களைப் போன்று விரயமாக்கப்படமாட்டாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

கடன் பெற்றுக்கொண்டாலும் விரயமாக்கமாட்டோம் புதிய அரசாங்கம் அறிவிப்பு  கடன் பெற்றுக்கொண்டாலும் அவற்றை விரயமாக்கப்போவதில்லை என புதிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.திறைசேரி உண்டியல்கள் மற்றும் பிணைமுறிகள் மூலம் கடன் பெற்றுக்கொண்டாலும் அவை உரிய முறையில் செலவிடப்படும் என தேசிய மக்கள் சக்தியின்  சிரேஸ்ட உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.கடந்த காலங்களில் பெற்றுக்கொண்ட கடன்களை செலுத்தவும், அரசாங்கத்தின் செலவுகளை ஈடு செய்யவும் இவ்வாறு கடன் பெற்றுக்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் நாட்டில் நிதியின்றி பணம் அச்சிடப்படவோ அல்லது திறைசேரி உண்டியல்கள் மூலம் புதிய கடன்கள் பெற்றுக்கொள்ளப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.அரசாங்கம் என்ற ரீதியில் தேவைக்கு ஏற்ற வகையில் திறைசேரி பத்திரங்களும், பிணைமுறிகளும் வெளியிடுவதாகவும், இவ்வாறு பெற்றுக்கொள்ளப்படும் கடன் வெளிப்படைத்தன்மையுடன் செலவிடப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.இதற்கு மாறாக கடந்த அரசாங்கங்களைப் போன்று விரயமாக்கப்படமாட்டாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement