• Jul 06 2024

சஜித்தை விட்டு விலகி மீண்டும் மகிந்தவுடன் இணையும் முன்னாள் சகா..! கொழும்பு அரசியலில் பரபரப்பு

Chithra / Mar 31st 2024, 1:20 pm
image

Advertisement

 

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம அரசியல் மாற்றத்திற்கு தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி அவர் சிறிலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து கொள்வதற்கு தயாராகவுள்ளார்.

இது தொடர்பில் சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் கருத்துகளை பரிமாறிக்கொண்டுள்ளார்.

மேலும் புத்தாண்டுக்கு முன்னதாக பொதுக்கூட்டம் ஒன்றில் பெரமுனவுடன் இணைய அவர் முடிவு செய்துள்ளதாகவும் தெரியவருகிறது.

அதிபர் தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவை முன்னிறுத்தியதால் தான் பொதுஜன பெரமுனவுடன் மனமுடைந்து போயிருந்ததாகவும், 

தற்போது எந்தத் தடையும் இல்லாததால், பொதுஜன பெரமுனவில் இணைவதில் தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சஜித்தை விட்டு விலகி மீண்டும் மகிந்தவுடன் இணையும் முன்னாள் சகா. கொழும்பு அரசியலில் பரபரப்பு  ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம அரசியல் மாற்றத்திற்கு தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.இதன்படி அவர் சிறிலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து கொள்வதற்கு தயாராகவுள்ளார்.இது தொடர்பில் சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் கருத்துகளை பரிமாறிக்கொண்டுள்ளார்.மேலும் புத்தாண்டுக்கு முன்னதாக பொதுக்கூட்டம் ஒன்றில் பெரமுனவுடன் இணைய அவர் முடிவு செய்துள்ளதாகவும் தெரியவருகிறது.அதிபர் தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவை முன்னிறுத்தியதால் தான் பொதுஜன பெரமுனவுடன் மனமுடைந்து போயிருந்ததாகவும், தற்போது எந்தத் தடையும் இல்லாததால், பொதுஜன பெரமுனவில் இணைவதில் தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement