• Jun 08 2025

யாழில் அளவுக்கதிகமாக மாத்திரைகளை விழுங்கிய குடும்பஸ்தர் உயிரிழப்பு..!

Sharmi / Jun 7th 2025, 10:56 pm
image

அளவுக்கதிகமாக மாத்திரைகளை உட்கொண்ட குடும்பஸ்தர்  பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் யாழில் பதிவாகியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கீரிமலை வீதி, சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த 77 வயதான குடும்பஸ்தர் ஒருவர், கடந்த நான்காம் திகதி மதுபோதையில் மாத்திரைகளை அளவுக்கதிகமாக உட்கொண்டுள்ளார். 

பின்னர் அவரது மனைவி ஐந்தாம் திகதி அதிகாலை அவரை எழுப்பியுள்ளார். 

எனினும் அவர் மயக்கம் அடைந்து காணப்பட்டதால் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

தொடர்ந்து மயக்க நிலையிலேயே காணப்பட்ட குறித்த குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் உயிரிழந்துள்ளார். 

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

மருத்துவ வில்லைகளை அளவுக்கதிகமாக உட்கொண்டதால் மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.


யாழில் அளவுக்கதிகமாக மாத்திரைகளை விழுங்கிய குடும்பஸ்தர் உயிரிழப்பு. அளவுக்கதிகமாக மாத்திரைகளை உட்கொண்ட குடும்பஸ்தர்  பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் யாழில் பதிவாகியுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கீரிமலை வீதி, சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த 77 வயதான குடும்பஸ்தர் ஒருவர், கடந்த நான்காம் திகதி மதுபோதையில் மாத்திரைகளை அளவுக்கதிகமாக உட்கொண்டுள்ளார். பின்னர் அவரது மனைவி ஐந்தாம் திகதி அதிகாலை அவரை எழுப்பியுள்ளார். எனினும் அவர் மயக்கம் அடைந்து காணப்பட்டதால் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.தொடர்ந்து மயக்க நிலையிலேயே காணப்பட்ட குறித்த குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.மருத்துவ வில்லைகளை அளவுக்கதிகமாக உட்கொண்டதால் மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement