• Sep 20 2024

பிரபல கோடீஸ்வர வர்த்தகர் மாயம்- நடந்தது என்ன.? samugammedia

Tamil nila / Aug 17th 2023, 12:14 pm
image

Advertisement

கொலொன்ன  பகுதியில்  கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளதாக கொலொன்ன பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இந்த கோடீஸ்வர வர்த்தகர் நேற்று (16.08.2023) பணத்துடன் தனது வானில் தெனியாய நகருக்குச் சென்ற போதே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

வர்த்தகருடன் எவ்வித தொடர்புகள் இதுவரை கிடைக்காததால் அவர் காணாமல் போயிருக்கலாம்  என குறித்த வர்த்தகரின் மனைவி கொலொன்ன பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

அனில்கந்த பொது மயானத்துக்கு அருகில், பணத்தை கொண்டு வருவதற்காக வர்த்தகர் சென்ற வானை பொலிஸார் கண்டுபிடித்துள்ளமையால் சந்தேகம் எழுந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை  கொலொன்ன பொலிஸ் அதிகாரிகள் குழு விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

பிரபல கோடீஸ்வர வர்த்தகர் மாயம்- நடந்தது என்ன. samugammedia கொலொன்ன  பகுதியில்  கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளதாக கொலொன்ன பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.இந்த கோடீஸ்வர வர்த்தகர் நேற்று (16.08.2023) பணத்துடன் தனது வானில் தெனியாய நகருக்குச் சென்ற போதே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.வர்த்தகருடன் எவ்வித தொடர்புகள் இதுவரை கிடைக்காததால் அவர் காணாமல் போயிருக்கலாம்  என குறித்த வர்த்தகரின் மனைவி கொலொன்ன பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.அனில்கந்த பொது மயானத்துக்கு அருகில், பணத்தை கொண்டு வருவதற்காக வர்த்தகர் சென்ற வானை பொலிஸார் கண்டுபிடித்துள்ளமையால் சந்தேகம் எழுந்துள்ளது.மேலதிக விசாரணைகளை  கொலொன்ன பொலிஸ் அதிகாரிகள் குழு விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement