• Mar 19 2025

விவசாயத்துக்கு வருடாந்தம் ஒதுக்கப்படும் நிதிக்கு நிரந்தரமாக தீர்வை கோரி வவுணதீவில் விவசாயிகள் போராட்டம்

Chithra / Mar 18th 2025, 3:31 pm
image


மட்டக்களப்பு - கண்டியனாறு, அடைச்சகல், ஆகிய குளங்களை  புனரமைக்குமாறும் வருடாவருடம் ஒதுக்கப்படும் 3 ஆயிரம் கோடி ரூபாவிற்கு நிரந்தரமாக விவசாய வாய்க்கல்களை புனரமைக்குமாறும்  கோரி விவசாயிகள்  இன்று  வவுணதீவு பிரதேச செயலகத்தின் முன்னாள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரதேச விவசாயிகள் அமைப்புக்கள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்ததையடுத்து இன்று காலை 9 மணிக்கு வவுணதீவு பிரதேச செயலகத்தின் முன் விவசாயிகள் ஒன்று திரண்டனர்.

இதனையடுத்து மாகாண நீர்பாசன திணைக்களமே வெளிப்படையாக வேலைகளை செய், கண்டியனாறு திட்டத்தை கைவிடப்பட்டதா?  அரசாங்கத்தின் நிதியினை பசளை மானியம் நஷ்டஈடு என விரயம் செய்யவா அரச அதிகாரிகள்?  ஏன் எமது இளைஞர் யுவதிகள் வெளிநாடு செல்லவேண்டும், மாகாண நீர்ப்பாசன திணைக்களமே? ஊப்பாற்றில் வீணாக செல்லும் நீரை விவசாயத்திற்கு பயன்படுத்த திட்டங்களை தீட்டு,

1600 ஏக்கர் விவசாய காணி 4000 ஏக்கர் மேட்டுக்காணிகளுக்கு நீர் வழங்குவதற்கு ஏன் தயக்கம், அரச அதிபரின் அராஜகம் ஒழிக? , பிரதேச அபிவிருத்தியின் நிலை என்ன? மாவட்டத்தில் வெள்ள நிவாரணம் வழங்குவதே அதிகாரிகளின் கடமையா? போன்ற வாசகங்கள் எந்தியவாறு சுமார் ஒரு மணித்தியாலம்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


விவசாயத்துக்கு வருடாந்தம் ஒதுக்கப்படும் நிதிக்கு நிரந்தரமாக தீர்வை கோரி வவுணதீவில் விவசாயிகள் போராட்டம் மட்டக்களப்பு - கண்டியனாறு, அடைச்சகல், ஆகிய குளங்களை  புனரமைக்குமாறும் வருடாவருடம் ஒதுக்கப்படும் 3 ஆயிரம் கோடி ரூபாவிற்கு நிரந்தரமாக விவசாய வாய்க்கல்களை புனரமைக்குமாறும்  கோரி விவசாயிகள்  இன்று  வவுணதீவு பிரதேச செயலகத்தின் முன்னாள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பிரதேச விவசாயிகள் அமைப்புக்கள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்ததையடுத்து இன்று காலை 9 மணிக்கு வவுணதீவு பிரதேச செயலகத்தின் முன் விவசாயிகள் ஒன்று திரண்டனர்.இதனையடுத்து மாகாண நீர்பாசன திணைக்களமே வெளிப்படையாக வேலைகளை செய், கண்டியனாறு திட்டத்தை கைவிடப்பட்டதா  அரசாங்கத்தின் நிதியினை பசளை மானியம் நஷ்டஈடு என விரயம் செய்யவா அரச அதிகாரிகள்  ஏன் எமது இளைஞர் யுவதிகள் வெளிநாடு செல்லவேண்டும், மாகாண நீர்ப்பாசன திணைக்களமே ஊப்பாற்றில் வீணாக செல்லும் நீரை விவசாயத்திற்கு பயன்படுத்த திட்டங்களை தீட்டு,1600 ஏக்கர் விவசாய காணி 4000 ஏக்கர் மேட்டுக்காணிகளுக்கு நீர் வழங்குவதற்கு ஏன் தயக்கம், அரச அதிபரின் அராஜகம் ஒழிக , பிரதேச அபிவிருத்தியின் நிலை என்ன மாவட்டத்தில் வெள்ள நிவாரணம் வழங்குவதே அதிகாரிகளின் கடமையா போன்ற வாசகங்கள் எந்தியவாறு சுமார் ஒரு மணித்தியாலம்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

Advertisement

Advertisement