• May 17 2024

மகனின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி தந்தை சாவு..! வேட்டைக்கு சென்றபோது ஏற்பட்ட துயரம்

Chithra / Jan 29th 2024, 2:00 pm
image

Advertisement

 

கேகாலை - தெதிகம, ஜயலத் கந்த பிரதேசத்தில் மகன் தவறுதலாக மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி தந்தை உயிரிழந்துள்ளார்.

காட்டுப்பன்றி வேட்டைக்கு தந்தையும் மகனும் நேற்றிரவு (28) சென்ற வேளையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகிய தந்தை தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதன்படி டபிள்யூ.சம்பத் என்ற 47 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளதுடன், அவரது 17 வயது மகனே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார் என பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

அத்தோடு, தந்தையும் மகனும் காட்டுப்பன்றியை சுற்றிவளைக்க இரு பக்கமாக சென்றுள்ள நிலையில் மகன் சுட்டதில் தந்தையின் தலையில் குண்டு பாய்ந்துள்ளது.

இதன் பின்னர், தனது தவறினால் தந்தை உயிரிழந்ததை அறிந்த மகன் உறவினர் ஒருவருடன் பொலிஸில் வந்து சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

மகனின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி தந்தை சாவு. வேட்டைக்கு சென்றபோது ஏற்பட்ட துயரம்  கேகாலை - தெதிகம, ஜயலத் கந்த பிரதேசத்தில் மகன் தவறுதலாக மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி தந்தை உயிரிழந்துள்ளார்.காட்டுப்பன்றி வேட்டைக்கு தந்தையும் மகனும் நேற்றிரவு (28) சென்ற வேளையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.இந்நிலையில், துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகிய தந்தை தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.இதன்படி டபிள்யூ.சம்பத் என்ற 47 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளதுடன், அவரது 17 வயது மகனே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார் என பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.அத்தோடு, தந்தையும் மகனும் காட்டுப்பன்றியை சுற்றிவளைக்க இரு பக்கமாக சென்றுள்ள நிலையில் மகன் சுட்டதில் தந்தையின் தலையில் குண்டு பாய்ந்துள்ளது.இதன் பின்னர், தனது தவறினால் தந்தை உயிரிழந்ததை அறிந்த மகன் உறவினர் ஒருவருடன் பொலிஸில் வந்து சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

Advertisement

Advertisement

Advertisement