• Sep 20 2024

மரத்தில் இருந்து விழுந்து 4 பிள்ளைகளின் தந்தை பலி - யாழில் பெருந்துயரம்..! samugammedia

Chithra / Oct 11th 2023, 7:32 am
image

Advertisement



யாழில் தென்னை மரத்திலிருந்து விழுந்து, குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் போது யாழ். புத்தூர் பகுதியைச் சேர்ந்த 65 வயதையுடைய பொன்னுத்துரை கணேசலிங்கம் என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே  உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் கடந்த 6ஆம் திகதி, தென்னையில் சீவல் தொழில் செய்வதற்காக ஏறிய நிலையில் வழுக்கி கீழே விழுந்ததுள்ளார்.

இந்நிலையில் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதனை தொடர்ந்து சடலம் மீதான பிரேத பரிசோதனைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளதுடன் அவரது சடலம் நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

மரத்தில் இருந்து விழுந்து 4 பிள்ளைகளின் தந்தை பலி - யாழில் பெருந்துயரம். samugammedia யாழில் தென்னை மரத்திலிருந்து விழுந்து, குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த நபர் நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதன் போது யாழ். புத்தூர் பகுதியைச் சேர்ந்த 65 வயதையுடைய பொன்னுத்துரை கணேசலிங்கம் என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே  உயிரிழந்துள்ளார்.குறித்த நபர் கடந்த 6ஆம் திகதி, தென்னையில் சீவல் தொழில் செய்வதற்காக ஏறிய நிலையில் வழுக்கி கீழே விழுந்ததுள்ளார்.இந்நிலையில் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.இதனை தொடர்ந்து சடலம் மீதான பிரேத பரிசோதனைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளதுடன் அவரது சடலம் நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement