• Sep 21 2024

மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய தந்தைக்கு 48 வருட கடூழிய சிறை!

Chithra / Jan 28th 2023, 7:31 am
image

Advertisement

தனது மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதுடன், குழந்தையைப் பெற்றெடுக்குமாறு வற்புறுத்திய தந்தையொருவருக்கு 48 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கேகாலை மேல் நீதிமன்ற நீதிபதி ஜயகி டி அல்விஸ் அவருக்கு  (26) இந்த தண்டனையை விதித்தார்.

அதன்போது,  பிரதிவாதி குற்றத்தை ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று பிள்ளைகளின் தந்தையான குற்றவாளிக்கு, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஐந்து இலட்சம் ரூபா நட்டஈடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தாயார் வேலைவாய்ப்புக்கான குவைத்துக்கு சென்றிருந்த வேளையில் 13 வயதாக சிறுமியை அவரது தந்தை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

சிறுமி தனது தந்தை மற்றும் தனது இரண்டு உடன்பிறப்புகளுடன் வசித்துவந்த நிலையில்,  தனது தந்தையினால் பல தடவை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய தந்தைக்கு 48 வருட கடூழிய சிறை தனது மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதுடன், குழந்தையைப் பெற்றெடுக்குமாறு வற்புறுத்திய தந்தையொருவருக்கு 48 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.கேகாலை மேல் நீதிமன்ற நீதிபதி ஜயகி டி அல்விஸ் அவருக்கு  (26) இந்த தண்டனையை விதித்தார்.அதன்போது,  பிரதிவாதி குற்றத்தை ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மூன்று பிள்ளைகளின் தந்தையான குற்றவாளிக்கு, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஐந்து இலட்சம் ரூபா நட்டஈடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.தாயார் வேலைவாய்ப்புக்கான குவைத்துக்கு சென்றிருந்த வேளையில் 13 வயதாக சிறுமியை அவரது தந்தை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.சிறுமி தனது தந்தை மற்றும் தனது இரண்டு உடன்பிறப்புகளுடன் வசித்துவந்த நிலையில்,  தனது தந்தையினால் பல தடவை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement