• Jun 02 2025

வவுனியாவில் வீதிகளில் குப்பைகளை வீசிய நபர்களுக்கு தண்டப்பணம்..!

Sharmi / May 31st 2025, 5:22 pm
image

வவுனியாவில் பொதுமக்கள் வீதிகளில் குப்பைகளை வீசி செல்வதினால் சுற்றுப்புறச் சூழல்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படுவதுடன் அப்பகுதிகளில் தூர்நாற்றம் வீசுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் வவுனியா சுகாதார துறையினர் முன்னெடுத்த விசேட நடவடிக்கையின் போது வீதிகளில் குப்பைகளை வீசிய ஐவருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் மேற்கொண்டிருந்தனர்.

வழக்கினை முன்னெடுத்த வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஐவருக்கும்  முதற்கட்ட எச்சரிக்கை விடுத்ததுடன் ஒவ்வொருவருக்கும் தலா 2000 ரூபா தண்டப்பணம் விதித்து உத்தரவிட்டார்.


வவுனியாவில் வீதிகளில் குப்பைகளை வீசிய நபர்களுக்கு தண்டப்பணம். வவுனியாவில் பொதுமக்கள் வீதிகளில் குப்பைகளை வீசி செல்வதினால் சுற்றுப்புறச் சூழல்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படுவதுடன் அப்பகுதிகளில் தூர்நாற்றம் வீசுவதாக தெரிவிக்கப்படுகிறது.இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் வவுனியா சுகாதார துறையினர் முன்னெடுத்த விசேட நடவடிக்கையின் போது வீதிகளில் குப்பைகளை வீசிய ஐவருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் மேற்கொண்டிருந்தனர்.வழக்கினை முன்னெடுத்த வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஐவருக்கும்  முதற்கட்ட எச்சரிக்கை விடுத்ததுடன் ஒவ்வொருவருக்கும் தலா 2000 ரூபா தண்டப்பணம் விதித்து உத்தரவிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement