• Jun 02 2025

நடேசனின் 21 ஆவது ஆண்டு நினைவேந்தல்..! படுகொலைக்கு நீதி கோரி மட்டக்களப்பில் கவனயீர்ப்பு..!

Sharmi / May 31st 2025, 6:09 pm
image

படுகொலை செய்யப்பட்ட மட்டக்களப்பு ஊடகவியலாளர்  ஐயாத்துறை நடேசனின் 21ஆவது ஆண்டு நினைவுதின அஞ்சலி நிகழ்வும், படுகொலைக்கான நீதிகோரிய கவனயீர்ப்பு போராட்டமும் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று(31) மாலை இடம்பெற்றது.

இதன்போது மறைந்த ஊடகவியலாளர் நடேசனின் உருவப் படத்துக்கு தீபமேற்றி, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இவ் அஞ்சலி நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்த 40 க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


நடேசனின் 21 ஆவது ஆண்டு நினைவேந்தல். படுகொலைக்கு நீதி கோரி மட்டக்களப்பில் கவனயீர்ப்பு. படுகொலை செய்யப்பட்ட மட்டக்களப்பு ஊடகவியலாளர்  ஐயாத்துறை நடேசனின் 21ஆவது ஆண்டு நினைவுதின அஞ்சலி நிகழ்வும், படுகொலைக்கான நீதிகோரிய கவனயீர்ப்பு போராட்டமும் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று(31) மாலை இடம்பெற்றது.இதன்போது மறைந்த ஊடகவியலாளர் நடேசனின் உருவப் படத்துக்கு தீபமேற்றி, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.இவ் அஞ்சலி நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்த 40 க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement