• Sep 08 2024

அம்பாறையிலுள்ள மர ஆலையொன்றில் திடீர் தீ விபத்து

Chithra / Jul 23rd 2024, 2:33 pm
image

Advertisement

 

அம்பாறை - காரைதீவு பிரதேச சபை நிர்வாக எல்லைக்குட்பட்ட மாளிகைக்காடு பிரதேசத்திலுள்ள மர ஆலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மரம் அறுக்கும் ஆலை தீப்பற்றியுள்ளதுடன் மரங்களும் எரிந்து சாம்பலாகியுள்ளன.

இந்த தீ விபத்தானது நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

குறித்த மர ஆலையில் தீ பரவல் ஏற்பட்ட போது, பிரதேசவாசிகள், கல்முனை மாநகர சபையின் தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த தீ விபத்தானது மின்கசிவு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் எனவும், 

இதன்போது உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.


அம்பாறையிலுள்ள மர ஆலையொன்றில் திடீர் தீ விபத்து  அம்பாறை - காரைதீவு பிரதேச சபை நிர்வாக எல்லைக்குட்பட்ட மாளிகைக்காடு பிரதேசத்திலுள்ள மர ஆலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மரம் அறுக்கும் ஆலை தீப்பற்றியுள்ளதுடன் மரங்களும் எரிந்து சாம்பலாகியுள்ளன.இந்த தீ விபத்தானது நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.குறித்த மர ஆலையில் தீ பரவல் ஏற்பட்ட போது, பிரதேசவாசிகள், கல்முனை மாநகர சபையின் தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.அத்துடன், இந்த தீ விபத்தானது மின்கசிவு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் எனவும், இதன்போது உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement