கொழும்பிலிருந்து மும்பை நோக்கிச் சென்று கொண்டிருந்த சிங்கப்பூர் நிறுவனத்துக்குச் சொந்தமான சரக்குக் கப்பல், கேரளக் கடற்பகுதியில் இன்று திடீரென தீ விபத்துக்குள்ளாகியது.
கொழும்பில் இருந்து மும்பைக்குச் சென்று கொண்டிருந்த சிங்கப்பூர் கொள்கலன் கப்பலான MV Wan Hai 503 என்ற கப்பல் கேரளக் கடற்பரப்பின் அரபிக்கடலில் திடீரென தீப்பிடித்தது.
சரக்குகளுடன் கப்பலில் 22 பேர் பயணித்துள்ளனர். கப்பலில் தீடிரென தீப்பிடித்த வேளை உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக 22 பேரில் கேப்டன் உட்பட 18 பேர் கடலில் குதித்துள்ளனர். அவர்கள் இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படையின் வளங்கள் மூலம் கடலில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். மீதமிருந்த 4 பயணிகளை மீட்கும் பணியில் கடலோர காவற்படை ஈடுபட்டு வருகின்றது.
குறித்த சரக்குக் கப்பலில் எரியக்கூடிய திடப்பொருட்கள், திரவங்கள் மற்றும் நச்சுப் பொருட்கள் காணப்பட்டுள்ளன. இதனாலேயே கப்பலில் தீ பரவி விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என்று கடற்படை தெரிவித்துள்ளது. எனினும் தீ விபத்திற்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
தீப்பிடித்த கப்பலில் இருந்து முதல் சம்பவத்திலேயே பத்து முதல் பதினைந்து கொள்கலன்கள் கடலுக்குள் விழுந்ததாக துறைமுக அதிகாரி கேப்டன் அருண் குமார் பி.கே தெரிவித்தார்.
இந்நிலையில், இந்த தீ விபத்து சம்பவத்தால் கேரள கடற்பரப்பில் எண்ணெய் கசிவு ஏற்படக்கூடும் என்று தேசிய பெருங்கடல் தகவல் சேவைகள் மையம் எச்சரித்துள்ளது. கப்பலில் 100 டன் அளவிலான எண்ணெய் இருந்ததாகவும், கடலில் விழுந்த அந்த கொள்கலன்கள் கோழிக்கோடு மற்றும் கொச்சி கடற்பகுதிக்கு இடையில் மிதப்பதாகவும் கூறப்படுகிறது.
தீப்பிடித்த கப்பல் கரும்புகையால் சூழப்பட்டுள்ள நிலையில் கப்பலை மீட்கும் பணியில் இந்திய கடலோர காவல்படை கப்பல்களான சச்செட், அர்னவேஷ், சமுத்திர பிரஹாரி, அபினவ், ராஜ்தூத் மற்றும் சி-144 உள்ளிட்ட ஐந்து ஐ.சி.ஜி கப்பல்கள் ஈடுபட்டுள்ளன என இந்தியக் கடற்படை தெரிவித்துள்ளது.
கொழும்பிலிருந்து மும்பைக்குச் சென்ற சரக்குக் கப்பலில் தீ விபத்து. - தற்போதைய நிலை இதுதான். கொழும்பிலிருந்து மும்பை நோக்கிச் சென்று கொண்டிருந்த சிங்கப்பூர் நிறுவனத்துக்குச் சொந்தமான சரக்குக் கப்பல், கேரளக் கடற்பகுதியில் இன்று திடீரென தீ விபத்துக்குள்ளாகியது. கொழும்பில் இருந்து மும்பைக்குச் சென்று கொண்டிருந்த சிங்கப்பூர் கொள்கலன் கப்பலான MV Wan Hai 503 என்ற கப்பல் கேரளக் கடற்பரப்பின் அரபிக்கடலில் திடீரென தீப்பிடித்தது. சரக்குகளுடன் கப்பலில் 22 பேர் பயணித்துள்ளனர். கப்பலில் தீடிரென தீப்பிடித்த வேளை உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக 22 பேரில் கேப்டன் உட்பட 18 பேர் கடலில் குதித்துள்ளனர். அவர்கள் இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படையின் வளங்கள் மூலம் கடலில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். மீதமிருந்த 4 பயணிகளை மீட்கும் பணியில் கடலோர காவற்படை ஈடுபட்டு வருகின்றது. குறித்த சரக்குக் கப்பலில் எரியக்கூடிய திடப்பொருட்கள், திரவங்கள் மற்றும் நச்சுப் பொருட்கள் காணப்பட்டுள்ளன. இதனாலேயே கப்பலில் தீ பரவி விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என்று கடற்படை தெரிவித்துள்ளது. எனினும் தீ விபத்திற்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. தீப்பிடித்த கப்பலில் இருந்து முதல் சம்பவத்திலேயே பத்து முதல் பதினைந்து கொள்கலன்கள் கடலுக்குள் விழுந்ததாக துறைமுக அதிகாரி கேப்டன் அருண் குமார் பி.கே தெரிவித்தார். இந்நிலையில், இந்த தீ விபத்து சம்பவத்தால் கேரள கடற்பரப்பில் எண்ணெய் கசிவு ஏற்படக்கூடும் என்று தேசிய பெருங்கடல் தகவல் சேவைகள் மையம் எச்சரித்துள்ளது. கப்பலில் 100 டன் அளவிலான எண்ணெய் இருந்ததாகவும், கடலில் விழுந்த அந்த கொள்கலன்கள் கோழிக்கோடு மற்றும் கொச்சி கடற்பகுதிக்கு இடையில் மிதப்பதாகவும் கூறப்படுகிறது.தீப்பிடித்த கப்பல் கரும்புகையால் சூழப்பட்டுள்ள நிலையில் கப்பலை மீட்கும் பணியில் இந்திய கடலோர காவல்படை கப்பல்களான சச்செட், அர்னவேஷ், சமுத்திர பிரஹாரி, அபினவ், ராஜ்தூத் மற்றும் சி-144 உள்ளிட்ட ஐந்து ஐ.சி.ஜி கப்பல்கள் ஈடுபட்டுள்ளன என இந்தியக் கடற்படை தெரிவித்துள்ளது.