• May 17 2024

அவிசாவளையில் தீ பரவல் - 45 பேர் பாதிப்பு! samugammedia

Tamil nila / Dec 1st 2023, 5:59 pm
image

Advertisement

அவிசாவளை – பென்ரீத் தோட்டம் பகுதியிலுள்ள தோட்ட குடியிருப்பொன்றில் பரவிய தீயினால் 8 லயின் அறைகள் தீக்கிரையாகியுள்ளன.

இந்த தீவிபத்து இன்று(01) முற்பகல் ஏற்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

தீவிபத்தினால், குறித்த லயின் வீட்டு குடியிருப்பில் தங்கியிருந்த 8 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த லயின் குடியிருப்பின் 4 வீடுகளுக்கு பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.

தீ விபத்து காரணமாக 45 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தீ பரவியமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், அவிசாவளை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அவிசாவளையில் தீ பரவல் - 45 பேர் பாதிப்பு samugammedia அவிசாவளை – பென்ரீத் தோட்டம் பகுதியிலுள்ள தோட்ட குடியிருப்பொன்றில் பரவிய தீயினால் 8 லயின் அறைகள் தீக்கிரையாகியுள்ளன.இந்த தீவிபத்து இன்று(01) முற்பகல் ஏற்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.தீவிபத்தினால், குறித்த லயின் வீட்டு குடியிருப்பில் தங்கியிருந்த 8 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.இந்த லயின் குடியிருப்பின் 4 வீடுகளுக்கு பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.தீ விபத்து காரணமாக 45 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.தீ பரவியமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், அவிசாவளை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement