• Sep 08 2024

ஹொரண பகுதியில் வர்த்தகர் மீது துப்பாக்கி சூடு...! சந்தேக நபர் கைது...!

Sharmi / May 20th 2024, 12:41 pm
image

Advertisement

ஹொரண கிரேஸ்லாண்ட்வத்த பிரதேசத்தில் கடந்த 5 ஆம் திகதி வர்த்தகர் ஒருவர் மீது இடம்பெற்ற  துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் சந்தேகநபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர், கொட்டாவ பிரதேசத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்த 31 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

பல நாட்களாக மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கைகளை அவதானித்த பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் வாடகை வீட்டில் வசித்து வருவதுடன், வேறு பகுதிக்கு செல்லவிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


ஹொரண பகுதியில் வர்த்தகர் மீது துப்பாக்கி சூடு. சந்தேக நபர் கைது. ஹொரண கிரேஸ்லாண்ட்வத்த பிரதேசத்தில் கடந்த 5 ஆம் திகதி வர்த்தகர் ஒருவர் மீது இடம்பெற்ற  துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் சந்தேகநபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இவ்வாறு கைது செய்யப்பட்டவர், கொட்டாவ பிரதேசத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்த 31 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.பல நாட்களாக மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கைகளை அவதானித்த பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.சந்தேக நபர் வாடகை வீட்டில் வசித்து வருவதுடன், வேறு பகுதிக்கு செல்லவிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement