• Jun 06 2025

திருமலையில் மீனவர் மீது துப்பாக்கி சூடு: கடற்றொழில் அமைச்சர் நடவடிக்கை..!

Sharmi / Jun 4th 2025, 2:52 pm
image

திருகோணமலை, குச்சவெளி சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுத்து கூடிய விரைவில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கடற்படையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மேற்படி அறிக்கையை  அடிப்படையாகக்கொண்டே சம்பவம் தொடர்பில் முடிவொன்றுக்கு வரமுடியும் எனவும், அடுத்தக்கட்ட நடவடிக்கையை முன்னெடுக்க முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். 

திருகோணமலை, குச்சவெளி கடற்பரப்பில் நேற்று (03)  சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டார் எனக் கூறப்படும் மீனவர் மீது கடற்படையினர் மேற்கொண்டனர் எனக் கூறப்படும் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். 

இது தொடர்பில் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்ட நிலையிலேயே சம்பவம் தொடர்பில் அவர் அறிக்கை கோரியுள்ளார்.  

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், 

'சட்டவிரோத மீன்பிடி முறையானது கடலுக்கும், நாட்டுக்கும் கேடு விளைவிக்கும். ஒரு சில மீனவர்களின் வருமானத்துக்காக பெரும்பாலானவர்களின் வருமானம் இழக்கப்படுகின்றது. 

அதனால்தான் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையை தடுக்குமாறு கடற்படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

திருகோணமலை சம்பவம் கூட, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையால் ஏற்பட்டதெனக் கூறப்படுகின்றது. விசாரணைகளின் பின்னரே உண்மை என்னவென்பது தெரியவரும்.

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையும் தவறு, துப்பாக்கிச்சூடு நடத்துவதும் தவறு, அதற்கு ஏதுவான சூழ்நிலையை உருவாக்குவதும் தவறு. எனவே, அறிக்கை கிடைத்த பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

திருமலையில் மீனவர் மீது துப்பாக்கி சூடு: கடற்றொழில் அமைச்சர் நடவடிக்கை. திருகோணமலை, குச்சவெளி சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுத்து கூடிய விரைவில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கடற்படையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.மேற்படி அறிக்கையை  அடிப்படையாகக்கொண்டே சம்பவம் தொடர்பில் முடிவொன்றுக்கு வரமுடியும் எனவும், அடுத்தக்கட்ட நடவடிக்கையை முன்னெடுக்க முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். திருகோணமலை, குச்சவெளி கடற்பரப்பில் நேற்று (03)  சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டார் எனக் கூறப்படும் மீனவர் மீது கடற்படையினர் மேற்கொண்டனர் எனக் கூறப்படும் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். இது தொடர்பில் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்ட நிலையிலேயே சம்பவம் தொடர்பில் அவர் அறிக்கை கோரியுள்ளார்.  இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், 'சட்டவிரோத மீன்பிடி முறையானது கடலுக்கும், நாட்டுக்கும் கேடு விளைவிக்கும். ஒரு சில மீனவர்களின் வருமானத்துக்காக பெரும்பாலானவர்களின் வருமானம் இழக்கப்படுகின்றது. அதனால்தான் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையை தடுக்குமாறு கடற்படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருகோணமலை சம்பவம் கூட, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையால் ஏற்பட்டதெனக் கூறப்படுகின்றது. விசாரணைகளின் பின்னரே உண்மை என்னவென்பது தெரியவரும்.சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையும் தவறு, துப்பாக்கிச்சூடு நடத்துவதும் தவறு, அதற்கு ஏதுவான சூழ்நிலையை உருவாக்குவதும் தவறு. எனவே, அறிக்கை கிடைத்த பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement