• May 30 2025

கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வுகள் மேற்கொள்ளப்படும் இடங்களை பார்வையிட்ட - மீன்பிடி அமைச்சர்

Thansita / May 29th 2025, 8:46 pm
image

கிளிநொச்சி மாவட்டத்தின் குஞ்சு பரந்தன் முதல் குடமுருட்டி வரையான கரையோரப் பகுதிகளில் சட்டவிரோத மணல் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் இடங்களை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் ஆகியோர் சென்று பார்வையிட்டுள்ளனர்

கிளிநொச்சி கரைச்சி பச்சிலைப்பள்ளி பூநகரி ஆகிய பகுதிக்குட்பட்ட பல்வேறு பிரதேசங்களிலும் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறன.

இதனால் பெருமளவான வயல் நிலங்கள் நீர் பாசன கட்டுமானங்கள் என்பன சேதமடைந்து வருகின்றன

இந்த நிலையில் (29-05-2025)இன்று பிற்பகல் பூநகரி பிரதேசத்துக்குட்பட்ட குஞ்சுப்பரந்தன் முதல் குடமுருட்டி வரை மணல் அகழ்வது தொடர்பில் பொது மக்கள் மற்றும் பொது அமைப்புகள் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில்

இன்றைய தினம் சம்பவ இடத்திற்கு சென்று நிலைமைகளை பார்வையிட்டதுடன் இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்


கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வுகள் மேற்கொள்ளப்படும் இடங்களை பார்வையிட்ட - மீன்பிடி அமைச்சர் கிளிநொச்சி மாவட்டத்தின் குஞ்சு பரந்தன் முதல் குடமுருட்டி வரையான கரையோரப் பகுதிகளில் சட்டவிரோத மணல் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் இடங்களை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் ஆகியோர் சென்று பார்வையிட்டுள்ளனர்கிளிநொச்சி கரைச்சி பச்சிலைப்பள்ளி பூநகரி ஆகிய பகுதிக்குட்பட்ட பல்வேறு பிரதேசங்களிலும் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறன.இதனால் பெருமளவான வயல் நிலங்கள் நீர் பாசன கட்டுமானங்கள் என்பன சேதமடைந்து வருகின்றன இந்த நிலையில் (29-05-2025)இன்று பிற்பகல் பூநகரி பிரதேசத்துக்குட்பட்ட குஞ்சுப்பரந்தன் முதல் குடமுருட்டி வரை மணல் அகழ்வது தொடர்பில் பொது மக்கள் மற்றும் பொது அமைப்புகள் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இன்றைய தினம் சம்பவ இடத்திற்கு சென்று நிலைமைகளை பார்வையிட்டதுடன் இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்

Advertisement

Advertisement

Advertisement