• May 30 2025

அகதி முகாம்களிலுள்ள ஈழ மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கிய தமிழ்நாட்டு முதலமைச்சர் ஸ்ராலின்!

Thansita / May 29th 2025, 9:11 pm
image

தமிழ்நாட்டு முகாம்களில் வாழும்  ஈழத்து  குடும்பங்களை சேர்ந்த 9 மாணவர்களுக்கு தலா 50000 பரிசுத்தொகையும்   சான்றிதழ்களையும் தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றைய தினம் வழங்கி வைத்துள்ளார். 

2024, 2025 ஆம் கல்வி ஆண்டில் 10,11,12ம் வகுப்பு  பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்களுக்கே ஊக்கத்தொகையாக மேற்படி பரிசுத்தொகை வழங்கிவைக்கப்பட்டுள்ளன. 


முகாம்வாழ் மாணவர்களின் கல்வித்தரத்தை ஊக்குவிக்கும் முகமாக கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். 

தமிழ்நாடு அரசு 2021ஆம் ஆண்டு பதவியேற்றதுடன் முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு பாதுகாப்பான மேம்படுத்தப்பட்ட வாழ்க்கை வழங்கப்படும் என்பதை உறுதி செய்வதாக அறிவித்தது 

மேலும் அவர்களின் நல்வாழ்விற்காக 10649 புதிய வீடுகள் கட்டித்தரப்படும்  என்று அறிவிக்கப்ட்டிருந்த நிலையில்  அவற்றில் 3000 வீடுகள் கட்டப்பட்டு பயனாளிகளிடம்  ஒப்படைக்கப்பட்டுள்ளன. 

மீதமுள்ள வீடுகளின்  கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் கல்வித்தரத்தை உயர்த்தும் நோக்கில் மேற்படி பரிசில்கள் முதலமைச்சாரல் வழங்கப்பட்டுள்ளன.


அகதி முகாம்களிலுள்ள ஈழ மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கிய தமிழ்நாட்டு முதலமைச்சர் ஸ்ராலின் தமிழ்நாட்டு முகாம்களில் வாழும்  ஈழத்து  குடும்பங்களை சேர்ந்த 9 மாணவர்களுக்கு தலா 50000 பரிசுத்தொகையும்   சான்றிதழ்களையும் தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றைய தினம் வழங்கி வைத்துள்ளார். 2024, 2025 ஆம் கல்வி ஆண்டில் 10,11,12ம் வகுப்பு  பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்களுக்கே ஊக்கத்தொகையாக மேற்படி பரிசுத்தொகை வழங்கிவைக்கப்பட்டுள்ளன. முகாம்வாழ் மாணவர்களின் கல்வித்தரத்தை ஊக்குவிக்கும் முகமாக கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசு 2021ஆம் ஆண்டு பதவியேற்றதுடன் முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு பாதுகாப்பான மேம்படுத்தப்பட்ட வாழ்க்கை வழங்கப்படும் என்பதை உறுதி செய்வதாக அறிவித்தது மேலும் அவர்களின் நல்வாழ்விற்காக 10649 புதிய வீடுகள் கட்டித்தரப்படும்  என்று அறிவிக்கப்ட்டிருந்த நிலையில்  அவற்றில் 3000 வீடுகள் கட்டப்பட்டு பயனாளிகளிடம்  ஒப்படைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள வீடுகளின்  கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் கல்வித்தரத்தை உயர்த்தும் நோக்கில் மேற்படி பரிசில்கள் முதலமைச்சாரல் வழங்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement