• Oct 22 2024

மீன்பிடி துறைமுகத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்த மீன்பிடி படகுகள்!

Chithra / Oct 21st 2024, 11:37 am
image

Advertisement

குடுவெல்ல மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு பல நாள் மீன்பிடி படகுகள் தீப்பிடித்து எரிந்துள்ளதாக தங்காலை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று (21) காலை 7.30 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டதாகவும் தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லையெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மற்ற மீன்பிடி படகுகளுக்கு தீ பரவாமல் தடுக்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். 

இந்த மீன்பிடி படகுகள் குடுவெல்ல பிரதேசத்தை சேர்ந்த ஜயந்த ஜயவீர என்பவருடையது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் தங்காலை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மீன்பிடி துறைமுகத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்த மீன்பிடி படகுகள் குடுவெல்ல மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு பல நாள் மீன்பிடி படகுகள் தீப்பிடித்து எரிந்துள்ளதாக தங்காலை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இன்று (21) காலை 7.30 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டதாகவும் தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லையெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.மற்ற மீன்பிடி படகுகளுக்கு தீ பரவாமல் தடுக்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த மீன்பிடி படகுகள் குடுவெல்ல பிரதேசத்தை சேர்ந்த ஜயந்த ஜயவீர என்பவருடையது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இச்சம்பவம் தொடர்பில் தங்காலை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement