• May 13 2024

இணையக் கடன் மோசடி - ஐந்து சீனப் பிரஜைகள் உட்பட இலங்கையரும் கைது!

Chithra / Jan 15th 2024, 4:55 pm
image

Advertisement

 

தெஹிவளையில் உள்ள இணையக் கடன் வழங்கும் நிலையமொன்றில் மேற்கொண்ட சோதனையின்போது ஐந்து சீனப் பிரஜைகள் உட்பட இலங்கையர் ஒருவரையும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கைது செய்துள்ளது.

குற்றப் புலனாய்வுத்துறையின் இணையக் குற்றப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் விளைவாக, 

நிறுவனத்திடமிருந்து எட்டு கணினிகள், பதின்மூன்று மடிக்கணினிகள் மற்றும் 41 தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், இது தொடர்பான முறைப்பாடுகள் ஏதேனும் இருந்தால் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திலோ அல்லது குற்றப் புலனாய்வுத்துறையின் இணையக் குற்றப்பிரிவிலோ தெரிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.

இணையக் கடன் மோசடி - ஐந்து சீனப் பிரஜைகள் உட்பட இலங்கையரும் கைது  தெஹிவளையில் உள்ள இணையக் கடன் வழங்கும் நிலையமொன்றில் மேற்கொண்ட சோதனையின்போது ஐந்து சீனப் பிரஜைகள் உட்பட இலங்கையர் ஒருவரையும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கைது செய்துள்ளது.குற்றப் புலனாய்வுத்துறையின் இணையக் குற்றப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் விளைவாக, நிறுவனத்திடமிருந்து எட்டு கணினிகள், பதின்மூன்று மடிக்கணினிகள் மற்றும் 41 தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதற்கிடையில், இது தொடர்பான முறைப்பாடுகள் ஏதேனும் இருந்தால் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திலோ அல்லது குற்றப் புலனாய்வுத்துறையின் இணையக் குற்றப்பிரிவிலோ தெரிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement