• May 09 2025

ஹெலிகொப்டர் விபத்து - 5 இராணுவ வீரர்கள் பலி! விசாரணைக்கு 9 பேர் கொண்ட குழு நியமனம்

Chithra / May 9th 2025, 11:35 am
image

 

மாதுருஓயா நீர்த்தேக்கத்தில் விழுந்து  இன்று காலை இடம்பெற்ற  ஹெலிகொப்டர் விபத்தில் 5 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மதுரு ஓயாவில் இன்று காலை 8.17 மணியளவில்  விமானப்படைக்குச் சொந்தமான ‘பெல் 212‘ ரக ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானது.

இதன்போது ஹெலிகொப்டரில் இருந்த 12 பேர் மீட்கப்பட்டு பொலன்னறுவை  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களில் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் விமானப்படை வீரர்கள் இருவரும், இராணுவ விசேட படையைச் சேர்ந்த மூவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹிங்குரக்கொடையில் இருந்து பயிற்சிக்காக புறப்பட்ட ஹெலிகொப்டரே இவ்வாறு விபத்துக்குள்ளானது. 

இந்நிலையில் ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள 9 பேர் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் தெரிவித்தார். 


ஹெலிகொப்டர் விபத்து - 5 இராணுவ வீரர்கள் பலி விசாரணைக்கு 9 பேர் கொண்ட குழு நியமனம்  மாதுருஓயா நீர்த்தேக்கத்தில் விழுந்து  இன்று காலை இடம்பெற்ற  ஹெலிகொப்டர் விபத்தில் 5 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.மதுரு ஓயாவில் இன்று காலை 8.17 மணியளவில்  விமானப்படைக்குச் சொந்தமான ‘பெல் 212‘ ரக ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானது.இதன்போது ஹெலிகொப்டரில் இருந்த 12 பேர் மீட்கப்பட்டு பொலன்னறுவை  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களில் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில் விமானப்படை வீரர்கள் இருவரும், இராணுவ விசேட படையைச் சேர்ந்த மூவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஹிங்குரக்கொடையில் இருந்து பயிற்சிக்காக புறப்பட்ட ஹெலிகொப்டரே இவ்வாறு விபத்துக்குள்ளானது. இந்நிலையில் ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள 9 பேர் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement