இலங்கையில் அண்மைய வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களிடையே மனநலப் பிரச்சினைகள் அதிகரிக்கக்கூடும் என்ற கவலையை சுகாதார மேம்பாட்டு பணியகம் வெளியிட்டுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்கள் பெரும்பாலும் உணர்ச்சி அதிர்ச்சியின் அறிகுறிகளைக் காட்டுவதாக மனநல மருத்துவ ஆலோசகர் வைத்தியர் விந்தியா விஜய பண்டார குறிப்பிட்டார்.
இந்த அறிகுறிகளில் தூக்கக் கோளாறுகள், நீடித்த மன அழுத்தம் மற்றும் உயிர் மாய்ப்பு எண்ணங்கள் கூட உள்ளடங்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அனர்த்தத்தின்போது ஏற்பட்ட அதிர்ச்சி மற்றும் நிச்சயமற்ற தன்மையின் விளைவாக பதற்றம், மனச்சோர்வு மற்றும் பிந்தைய அதிர்ச்சி-மன அழுத்தக் கோளாறு போன்ற நிலைமைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு மனநலக் குழுக்களைச் சுகாதார அமைச்சு அனுப்பி வைத்து, சமூக உளவியல் ஆதரவு மற்றும் ஆலோசனை சேவைகளை வழங்குகிறது.
நிவாரணப் பணிகளின் அடுத்த கட்டம், உணவு மற்றும் தங்குமிடத்திற்கு அப்பால் செல்ல வேண்டும் என்று அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
நீண்ட கால உளவியல் சிக்கல்களைத் தடுப்பதற்காக, நிவாரண மையங்களுக்குள் பாதுகாப்பான இடங்கள் மற்றும் தொடர்ச்சியான பின்தொடர் சிகிச்சையின் அவசியம் குறித்தும் சுகாதார நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனநலப் பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் இலங்கையில் அண்மைய வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களிடையே மனநலப் பிரச்சினைகள் அதிகரிக்கக்கூடும் என்ற கவலையை சுகாதார மேம்பாட்டு பணியகம் வெளியிட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்கள் பெரும்பாலும் உணர்ச்சி அதிர்ச்சியின் அறிகுறிகளைக் காட்டுவதாக மனநல மருத்துவ ஆலோசகர் வைத்தியர் விந்தியா விஜய பண்டார குறிப்பிட்டார். இந்த அறிகுறிகளில் தூக்கக் கோளாறுகள், நீடித்த மன அழுத்தம் மற்றும் உயிர் மாய்ப்பு எண்ணங்கள் கூட உள்ளடங்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். அனர்த்தத்தின்போது ஏற்பட்ட அதிர்ச்சி மற்றும் நிச்சயமற்ற தன்மையின் விளைவாக பதற்றம், மனச்சோர்வு மற்றும் பிந்தைய அதிர்ச்சி-மன அழுத்தக் கோளாறு போன்ற நிலைமைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் அவர் எச்சரித்துள்ளார். பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு மனநலக் குழுக்களைச் சுகாதார அமைச்சு அனுப்பி வைத்து, சமூக உளவியல் ஆதரவு மற்றும் ஆலோசனை சேவைகளை வழங்குகிறது. நிவாரணப் பணிகளின் அடுத்த கட்டம், உணவு மற்றும் தங்குமிடத்திற்கு அப்பால் செல்ல வேண்டும் என்று அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். நீண்ட கால உளவியல் சிக்கல்களைத் தடுப்பதற்காக, நிவாரண மையங்களுக்குள் பாதுகாப்பான இடங்கள் மற்றும் தொடர்ச்சியான பின்தொடர் சிகிச்சையின் அவசியம் குறித்தும் சுகாதார நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.