• Oct 05 2024

புத்தளத்தில் கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு சிகரட்கள்- ஒருவர் கைது!

Tamil nila / Oct 5th 2024, 8:44 pm
image

Advertisement

புத்தளம் - தப்போவ பஸ் நிலையத்திற்கு அருகில் வைத்து ஒருதொகை வெளிநாட்டு சிகரட்களுடன் சந்தேகத்தின் பெயரில் ஒருவர் இன்று (5) விஷேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படும் குறித்த சிகரட்கள் , விற்பனை செய்ய தயாராக இருந்த போது , சந்தேக நபர் விஷேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வவுனியா பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

சந்தேக நபரிடமிருந்து 101 வெளிநாட்டு சிகரட் பெட்டிகள் விஷேட அதிரடிப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபரும் , அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு சிகரட்கள் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கருவலகஸ்வெவ பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் விஷேட அதிரடிப் படையினர் குறிப்பிட்டனர்.

புத்தளத்தில் கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு சிகரட்கள்- ஒருவர் கைது புத்தளம் - தப்போவ பஸ் நிலையத்திற்கு அருகில் வைத்து ஒருதொகை வெளிநாட்டு சிகரட்களுடன் சந்தேகத்தின் பெயரில் ஒருவர் இன்று (5) விஷேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படும் குறித்த சிகரட்கள் , விற்பனை செய்ய தயாராக இருந்த போது , சந்தேக நபர் விஷேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வவுனியா பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.சந்தேக நபரிடமிருந்து 101 வெளிநாட்டு சிகரட் பெட்டிகள் விஷேட அதிரடிப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபரும் , அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு சிகரட்கள் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கருவலகஸ்வெவ பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் விஷேட அதிரடிப் படையினர் குறிப்பிட்டனர்.

Advertisement

Advertisement

Advertisement