திருகோணமலை நகர் முக்கிய வளங்களை கொண்டு காணப்படுவதால் பல நாடுகள் கண் வைத்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் அருண் ஹேமச் சந்திரா தெரிவித்தார்.
திருகோணமலையில் இன்று (04)இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் தெரிவிக்கையில் இந்தியா சீனா அமெரிக்கா எந்த நாடாக இருந்தாலும் திருகோணமலை மீது கண் வைத்துள்ளது தேசிய சொத்துக்கள் விற்பனை செய்து கொள்வது தொடர்பில் அரசாங்கத்தின் அசமந்த போக்கும் காரணமாக உள்ளது.சம்பூர் மற்றும் பெற்றோலிய வளம் போன்றன இதற்குள் அடங்குகின்றன. எனவும் தெரிவித்துள்ள அவர் தேசிய மக்கள் சக்தி ஆட்சி காலத்தில் இது போன்ற விடயங்கள் நிறுத்தப்பட்டு மக்கள் ஆட்சி மலரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.