• May 18 2024

சுதந்திரக்கட்சியின் ஆட்சி விரைவில் மலரும் - மைத்திரி இப்படி நம்பிக்கை

Tharun / May 4th 2024, 8:05 pm
image

Advertisement

ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையில் ஆட்சி மலரும் காலம் வெகுதொலைவில் இல்லை என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

"என் அரசியல் பயணம் ஆளுந்தரப்பினருக்குப் பிடிக்கவில்லை. அதனால் அவர்கள் என்னைச் சிறையில் அடைக்கச் சகல வழிகளிலும் முயல்கின்றனர். சிறையில் அடைக்கும் அளவுக்கு நான் குற்றம் எதுவும் செய்யவில்லை.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவத்தின் உண்மைத் தகவல்கள் வெளியானால் தங்கள் அரசியலுக்கு வேட்டு வைக்கப்படும் என்று ஆளுந்தரப்பினரான மொட்டுக் கட்சியினர் எண்ணுகின்றனர். அதனால் அவர்கள் எனது அரசியல் பயணத்தை முடக்க முயல்கின்றனர்.

என் அரசியல் பயணத்தை எவராலும் தடுக்க முடியாது. நெருக்கடி நிலைமையிலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை  விரைவில் மீட்டெடுப்பேன். சுதந்திரக்கட்சியின் தலைமையில் ஆட்சி மலரும் காலம் வெகுதொலைவில் இல்லை." - என்றார்.

சுதந்திரக்கட்சியின் ஆட்சி விரைவில் மலரும் - மைத்திரி இப்படி நம்பிக்கை ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையில் ஆட்சி மலரும் காலம் வெகுதொலைவில் இல்லை என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,"என் அரசியல் பயணம் ஆளுந்தரப்பினருக்குப் பிடிக்கவில்லை. அதனால் அவர்கள் என்னைச் சிறையில் அடைக்கச் சகல வழிகளிலும் முயல்கின்றனர். சிறையில் அடைக்கும் அளவுக்கு நான் குற்றம் எதுவும் செய்யவில்லை.உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவத்தின் உண்மைத் தகவல்கள் வெளியானால் தங்கள் அரசியலுக்கு வேட்டு வைக்கப்படும் என்று ஆளுந்தரப்பினரான மொட்டுக் கட்சியினர் எண்ணுகின்றனர். அதனால் அவர்கள் எனது அரசியல் பயணத்தை முடக்க முயல்கின்றனர்.என் அரசியல் பயணத்தை எவராலும் தடுக்க முடியாது. நெருக்கடி நிலைமையிலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை  விரைவில் மீட்டெடுப்பேன். சுதந்திரக்கட்சியின் தலைமையில் ஆட்சி மலரும் காலம் வெகுதொலைவில் இல்லை." - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement