• Sep 14 2026

இலங்கையை மீட்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் - 8 மாதங்களில் கிடைத்த பல மில்லியன் டொலர்கள்

Chithra / Sep 13th 2026, 4:13 pm
image



வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர்களால், நாட்டிற்கு கடந்த ஓகஸ்ட் மாதத்தில் 748.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

 

கடந்த 2025ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில், வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர்கள் பணம் அனுப்பும் வீதம் இவ்வாண்டு அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

 

இதற்கமைய, 2025 ஓகஸ்ட் மாதத்தில் 680.8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பணம் அனுப்பப்பட்டிருந்தன.

 

இதேவேளை, 2026ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர்களிடமிருந்து மொத்தமாக 6.131 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நாட்டிற்கு கிடைத்துள்ளன.

 

2025ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் 5.116 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பணம் அனுப்பப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டில் தொழிலாளர்களின் பணம் அனுப்புகை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கையை மீட்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் - 8 மாதங்களில் கிடைத்த பல மில்லியன் டொலர்கள் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர்களால், நாட்டிற்கு கடந்த ஓகஸ்ட் மாதத்தில் 748.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. கடந்த 2025ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில், வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர்கள் பணம் அனுப்பும் வீதம் இவ்வாண்டு அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதற்கமைய, 2025 ஓகஸ்ட் மாதத்தில் 680.8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பணம் அனுப்பப்பட்டிருந்தன. இதேவேளை, 2026ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர்களிடமிருந்து மொத்தமாக 6.131 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நாட்டிற்கு கிடைத்துள்ளன. 2025ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் 5.116 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பணம் அனுப்பப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டில் தொழிலாளர்களின் பணம் அனுப்புகை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement