• Oct 18 2024

பாஜக சார்பில் தேர்தலில் போட்டியிடும் இலங்கைக்கான முன்னாள் இந்திய உயர்ஸ்தானிகர்..!!

Tamil nila / May 11th 2024, 10:50 pm
image

Advertisement

இலங்கைக்கான முன்னாள் இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து, இந்தியாவின் பாஜகவில் இணைந்து தேர்தலில் போட்டியிடவுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை அவர் தனது மொத்த சொத்து மதிப்பு 39.92 கோடி ரூபா என்று அவரது கருத்துக்கணிப்பு வாக்குமூலத்தின்படி அறிவித்தார் 

ஜூன் மாதம் முதலாம் திகதியன்று 57 தொகுதிகளில் தேர்தல் வாக்குப்பதிவுகள் இடம்பெறவுள்ள நிலையில் அமிர்தசரஸ்தொகுதியில் பாஜக வேட்பாளராக தரன்ஜித் சிங் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கைக்கான முன்னாள் இந்திய உயர்ஸ்தானிகராக பணியாற்றியதையடுத்து அமெரிக்காவிலும் பணிபுரிந்துள்ளார்.

அவரது வாக்கு மூலத்தின்படி, சந்து தனக்கும் அவரது மனைவிக்கும் சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துகள் முறையே 10.88 கோடி ரூபா மற்றும் 29.04 கோடி ரூபா என அறிவித்தார்.




பாஜக சார்பில் தேர்தலில் போட்டியிடும் இலங்கைக்கான முன்னாள் இந்திய உயர்ஸ்தானிகர். இலங்கைக்கான முன்னாள் இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து, இந்தியாவின் பாஜகவில் இணைந்து தேர்தலில் போட்டியிடவுள்ளார்.கடந்த வெள்ளிக்கிழமை அவர் தனது மொத்த சொத்து மதிப்பு 39.92 கோடி ரூபா என்று அவரது கருத்துக்கணிப்பு வாக்குமூலத்தின்படி அறிவித்தார் ஜூன் மாதம் முதலாம் திகதியன்று 57 தொகுதிகளில் தேர்தல் வாக்குப்பதிவுகள் இடம்பெறவுள்ள நிலையில் அமிர்தசரஸ்தொகுதியில் பாஜக வேட்பாளராக தரன்ஜித் சிங் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இலங்கைக்கான முன்னாள் இந்திய உயர்ஸ்தானிகராக பணியாற்றியதையடுத்து அமெரிக்காவிலும் பணிபுரிந்துள்ளார்.அவரது வாக்கு மூலத்தின்படி, சந்து தனக்கும் அவரது மனைவிக்கும் சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துகள் முறையே 10.88 கோடி ரூபா மற்றும் 29.04 கோடி ரூபா என அறிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement