• Oct 16 2024

விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில்!

Chithra / Oct 15th 2024, 2:02 pm
image

Advertisement


முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் வியாழக்கிழமை விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக தெரியவருகின்றது.

இவர் இந்த விசேட அறிக்கையின் மூலம் நாட்டின் அரசியல் நடத்தை மற்றும் எதிர்காலத் திட்டங்களை வெளிப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ரணில் விக்கிரமசிங்க பகிரங்க அறிக்கை ஒன்றை வெளியிடுவது இதுவே முதல் தடவையாகும்.

அடுத்த தேர்தலில் போட்டியிடப்போவதில்லையெனவும் தேசிய பட்டியலிலிருந்து பாராளுமன்றத்திற்கு வரப்போவதில்லையெனவும் முன்னரே தீர்மானித்திருந்தார்.

பொதுத் தேர்தலில் கேஸ் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் புதிய ஜனநாயக முன்னணிக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் தலைமை தாங்குவதும் குறிப்பிடத்தக்கது.


விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் வியாழக்கிழமை விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக தெரியவருகின்றது.இவர் இந்த விசேட அறிக்கையின் மூலம் நாட்டின் அரசியல் நடத்தை மற்றும் எதிர்காலத் திட்டங்களை வெளிப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ரணில் விக்கிரமசிங்க பகிரங்க அறிக்கை ஒன்றை வெளியிடுவது இதுவே முதல் தடவையாகும்.அடுத்த தேர்தலில் போட்டியிடப்போவதில்லையெனவும் தேசிய பட்டியலிலிருந்து பாராளுமன்றத்திற்கு வரப்போவதில்லையெனவும் முன்னரே தீர்மானித்திருந்தார்.பொதுத் தேர்தலில் கேஸ் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் புதிய ஜனநாயக முன்னணிக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் தலைமை தாங்குவதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement