• May 10 2024

கொழும்பில் பெண் உட்பட நால்வர் கைது...!samugammedia

Anaath / Dec 19th 2023, 5:48 pm
image

Advertisement

கொழும்பு கிரிபத்கொடவில் அமைந்துள்ள இரவு விடுதியில் ஒன்றில் பெண் ஒருவர் உட்பட நான்கு பேர் கைது  நேற்று பிற்பகல் செய்யப்பட்டுள்ளனர். 

குறித்த விடுதியில் இடம்பெற்றுள்ள துப்பாக்கி சூட் டு சம்பவம் தொடர்பிலேயே அவர்களை செய்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

களனி விசேட பணியகத்திற்கு கிடைத்த தகவலின் படி, ராகம பொலிஸாரினால் இந்த குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்  கைது செய்யப்பட்டுள்ள யுவதி உட்பட நால்வரும் 20 மற்றும் 25 வயதுடைய ராகம மற்றும் முகத்துவாரம் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட போது அவர்களிடம் இருந்து 5,200 மில்லிகிராம் ஹெரோயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைத் துப்பாக்கி ரக துப்பாக்கியால் இரண்டு ஆண்களையும் ஒரு பெண்ணையும் காயப்படுத்தி குற்றம் செய்ய முயற்சித்தமை, மற்றும் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவர்கள் வெலிசர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதையடுத்து, தடுப்புக் காவல் உத்தரவு பெறப்பட்டு, மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் பெண் உட்பட நால்வர் கைது.samugammedia கொழும்பு கிரிபத்கொடவில் அமைந்துள்ள இரவு விடுதியில் ஒன்றில் பெண் ஒருவர் உட்பட நான்கு பேர் கைது  நேற்று பிற்பகல் செய்யப்பட்டுள்ளனர். குறித்த விடுதியில் இடம்பெற்றுள்ள துப்பாக்கி சூட் டு சம்பவம் தொடர்பிலேயே அவர்களை செய்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.களனி விசேட பணியகத்திற்கு கிடைத்த தகவலின் படி, ராகம பொலிஸாரினால் இந்த குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்  கைது செய்யப்பட்டுள்ள யுவதி உட்பட நால்வரும் 20 மற்றும் 25 வயதுடைய ராகம மற்றும் முகத்துவாரம் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.கைது செய்யப்பட்ட போது அவர்களிடம் இருந்து 5,200 மில்லிகிராம் ஹெரோயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.கைத் துப்பாக்கி ரக துப்பாக்கியால் இரண்டு ஆண்களையும் ஒரு பெண்ணையும் காயப்படுத்தி குற்றம் செய்ய முயற்சித்தமை, மற்றும் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.இவர்கள் வெலிசர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதையடுத்து, தடுப்புக் காவல் உத்தரவு பெறப்பட்டு, மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement