நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நான்கு தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு கடற்படையினர் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அதன்போது சட்டவிரோதமான முறையில் நெடுந்தீவு கடற்பரப்பினுள் படகொன்றில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நான்கு மீனவர்களை இனங்கண்டு கைது செய்தனர். அத்துடன் அவர்களின் படகினையும் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்ற கடற்படையினர் , மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நெடுந்தீவு கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் நால்வர் கைது நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நான்கு தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு கடற்படையினர் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதன்போது சட்டவிரோதமான முறையில் நெடுந்தீவு கடற்பரப்பினுள் படகொன்றில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நான்கு மீனவர்களை இனங்கண்டு கைது செய்தனர். அத்துடன் அவர்களின் படகினையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்ற கடற்படையினர் , மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.