• Sep 06 2026

இன்று முதல் டின் மீன் விலையில் புதிய மாற்றம் – வர்த்தமானி வெளியானது

Chithra / Sep 5th 2026, 11:00 am
image


இன்று (05) முதல் உள்நாட்டு டின் மீன் வகைகளுக்காக புதிய அதிகூடிய சில்லறை விலைகள் நிர்ணயிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.


அதன்படி, சூரை மீன், கானாங்கெளுத்தி உள்ளிட்ட டின் மீன்களுக்கான அதிகபட்ச சில்லறை விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.


155 கிராம் நிகர எடை மற்றும் 105 கிராம் அல்லது அதற்கு மேற்பட்ட திரவமற்ற எடை கொண்ட பதப்படுத்தப்பட்ட ஒரு டின் சூரை மீனின் அதிகபட்ச சில்லறை விலை  220 ரூபாவாகவும், 


அதே சமயம் 425 கிராம் எடை மற்றும் 280 கிராம் அல்லது அதற்கு மேற்பட்ட திரவமற்ற எடை கொண்ட பதப்படுத்தப்பட்ட டின் மீனின் விலை  510 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


155 கிராம் நிகர எடை மற்றும் 105 கிராம் அல்லது அதற்கு மேற்பட்ட திரவமற்ற எடை கொண்ட ஒரு டின் ஜாக் மெக்கரல் மீனின் அதிகபட்ச சில்லறை விலை  260 ரூபாவாகவும், 425 கிராம் டின்னின் விலை 600 ரூபாவாகவும் உள்ளது.


சம்பந்தப்பட்ட டின் மீன் வகைகளை இந்த விலைகளை விட அதிக விலையில் விற்கவோ, விற்பனைக்கு வழங்கவோ அல்லது காட்சிப்படுத்தவோ கூடாது என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.


இன்று முதல் டின் மீன் விலையில் புதிய மாற்றம் – வர்த்தமானி வெளியானது இன்று (05) முதல் உள்நாட்டு டின் மீன் வகைகளுக்காக புதிய அதிகூடிய சில்லறை விலைகள் நிர்ணயிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி, சூரை மீன், கானாங்கெளுத்தி உள்ளிட்ட டின் மீன்களுக்கான அதிகபட்ச சில்லறை விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.155 கிராம் நிகர எடை மற்றும் 105 கிராம் அல்லது அதற்கு மேற்பட்ட திரவமற்ற எடை கொண்ட பதப்படுத்தப்பட்ட ஒரு டின் சூரை மீனின் அதிகபட்ச சில்லறை விலை  220 ரூபாவாகவும், அதே சமயம் 425 கிராம் எடை மற்றும் 280 கிராம் அல்லது அதற்கு மேற்பட்ட திரவமற்ற எடை கொண்ட பதப்படுத்தப்பட்ட டின் மீனின் விலை  510 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.155 கிராம் நிகர எடை மற்றும் 105 கிராம் அல்லது அதற்கு மேற்பட்ட திரவமற்ற எடை கொண்ட ஒரு டின் ஜாக் மெக்கரல் மீனின் அதிகபட்ச சில்லறை விலை  260 ரூபாவாகவும், 425 கிராம் டின்னின் விலை 600 ரூபாவாகவும் உள்ளது.சம்பந்தப்பட்ட டின் மீன் வகைகளை இந்த விலைகளை விட அதிக விலையில் விற்கவோ, விற்பனைக்கு வழங்கவோ அல்லது காட்சிப்படுத்தவோ கூடாது என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement