கௌதாரிமுனை காற்றாலை திட்டத்தின் ஊடாக
எமது மக்களுக்கும் நாட்டிற்கும் எவ்வாறான நன்மைகளை கூடியளவு விரைவில்
பெற்றுக்கொள்ள முடியும் என்பதிலேயே தான் ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ள
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,
குறுகிய சுயலாப அரசியல் நோக்கங்களுக்காக
முன்னெடுக்கப்படும் கால இழுத்தடிப்புக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும்
தெரிவித்தார்.
மேலும்,
கடந்த காலங்களிலும், இன்றைய சந்திப்பிலும் மக்கள் பிரதிநிதிகளினாலும்
அதிகாரிகளினாலும் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் - ஆலோசனைகள் மற்றும் வாதப்
பிரதிவாதங்களின் அடிப்படையில் மக்களுக்கு கிடைக்க வேண்டிய நன்மைகளை
தெளிவான முறையில் அடையாளப்படுத்தி, அவை நடைமுறைப்படுத்தப்படும் என்பதை
உறுதிப்படுத்திக் கொண்டதன பின்னர், ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் என்ற
அடிப்படையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சர் டக்ளஸ்
தேவானந்தா தெரிவித்தார்.
கெளதாரிமுனை
காற்றாலை திட்டத்திற்கு அனுமதி வழங்குவது தொடர்பான விசேட கலந்துரையாடல்
தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே கடற்றொழில் அமைச்சர்
மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கௌதாரிமுனை காற்றாலை திட்டம். கால இழுத்தடிப்புக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறார் அமைச்சர் டக்ளஸ்.samugammedia கௌதாரிமுனை காற்றாலை திட்டத்தின் ஊடாக
எமது மக்களுக்கும் நாட்டிற்கும் எவ்வாறான நன்மைகளை கூடியளவு விரைவில்
பெற்றுக்கொள்ள முடியும் என்பதிலேயே தான் ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ள
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறுகிய சுயலாப அரசியல் நோக்கங்களுக்காக
முன்னெடுக்கப்படும் கால இழுத்தடிப்புக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும்
தெரிவித்தார்.மேலும்,
கடந்த காலங்களிலும், இன்றைய சந்திப்பிலும் மக்கள் பிரதிநிதிகளினாலும்
அதிகாரிகளினாலும் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் - ஆலோசனைகள் மற்றும் வாதப்
பிரதிவாதங்களின் அடிப்படையில் மக்களுக்கு கிடைக்க வேண்டிய நன்மைகளை
தெளிவான முறையில் அடையாளப்படுத்தி, அவை நடைமுறைப்படுத்தப்படும் என்பதை
உறுதிப்படுத்திக் கொண்டதன பின்னர், ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் என்ற
அடிப்படையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சர் டக்ளஸ்
தேவானந்தா தெரிவித்தார்.கெளதாரிமுனை
காற்றாலை திட்டத்திற்கு அனுமதி வழங்குவது தொடர்பான விசேட கலந்துரையாடல்
தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே கடற்றொழில் அமைச்சர்
மேற்கண்டவாறு தெரிவித்தார்.